districts

img

மக்கள் நலன் சார்ந்த மருந்து கொள்கைகளை உருவாக்க வலியுறுத்தல்

ஈரோடு, ஆக.28- மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு அடிப்படை உரிமை களை பெற்று தர வலியுறுத்தி ஈரோடு தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மருந்து துறையை பாதுகாக்கவும், மக்கள் நலன் சார்ந்த  மருந்து கொள்கை உருவாக்கவும் தமிழ்நாடு மருந்து விற்ப னையாளர் பிரதிநிதிகள் சங்கம் போராடி வருகிறது. அதே நேரத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நியமன ஆணை, 8 மணி நேர வேலை, பிஎஃப்,  இஎஸ்ஐ, பே ஸ்லிப், போனஸ் உள்ளிட்ட அடிப்படை உரிமை களை வழங்காமல் பல மருந்து நிறுவனங்கள் ஏமாற்றி வரு கின்றன. இதனைப் பெற்றுத்தர மாநில அரசின் தொழிலாளர் நலத்துறையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் மு.சங்கரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் நாராயணசாமி, சிஐடியு மாவட் டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரையாற் றினார். திரளானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் நிறை வாக பொருளாளர் கோபிநாத் நன்றி கூறினார்.