districts

img

பாரா ஒலிம்பிக் போட்டியில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்றார்

மதுரை, மே 12- மதுரை மாநகராட்சி அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த செவித்திறன் மாற்றுத் திறனாளியான ஜெ.ஜெர்லின் அனிகா . பிரேசிலில் நடைபெற்ற 24 ஆ வது ( Olympic Deaf ) பாரா ஒலிம்பிக் இறகு பந்து போட்டி ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கமும் , கலப்பு இரட்டையர் பிரிவில் தங்க பதக்கமும் வென்றுள்ளார். மேலும் இந்திய அணி பேட்மின்டன் குழு போட்டியிலும் வென்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளது . தங்கப்பதக்கம் பெற்ற மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு மேயர் வ.இந்திராணி, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .அனிகா ஜெ.ஜெர்லின் 2018 இல் மலேசியாவில் நடந்த ஆசியா பசிபிக் பேட்மின்டன் சாம்பின்ஷிப் போட்டியில் 2 வெள்ளி , 1 வெண்கலப் பதக்கமும் , 2019 ஆம் ஆண்டு சீனா தைபேயில் சிறப்பு பிரிவினருக்கான 2 ஆவது உலக இறகுபந்தாட்டம் (பேட்மின்டன்) சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார்.