districts

கிலோவாட்டுக்கான மின் கட்டணத்தை கைவிடுக

கோவை, ஆக. 12- கிலோ வாட்டுக்கான கட்டணத்தை 300 சதவிகிதம் அதிகமாக செலுத்தி வருவதால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தொழில்கள் உள்ளது. எனவே கிலோ வாட் டுக்கான மின் கட்டணத்தை கைவிட வேண்டும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை கோவை தொழில் கூட்டமைப்பு  வலியுறுத்தியுள்ளது.  கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் மின் துறை அமைச்சருக்கு அளித்துள்ள மனுவில்  தெரிவித்துள்ளதாவது.  தமிழக அரசு 2022 டாரிப்பில் குடிசை மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின்இணைப்பு பெறுபவர்களுக்கு எல்டி3ஏ-1ன்படி மின்இணைப்புகள் வழங்க வேண்டும். 12 கிலோ வாட்டுக்கு கீழ் இணைப்புகளை ஒரு சில ஆயிரம் பேர்களே  பெற்றுள்ளனர்.  இந்நிலையில், மின்சாரவாரிய அதிகாரி கள் எல்டி3ஏ-1- டாரிப்பில் இணைப்பை கொடுக்க மறுத்து எல்டி3பி-யில் கொடுத்து வருகின்றனர். அதிகாரிகளின் இந்த நடவடிக் கையால் அரசு கொடுக்கின்ற சலுகைகளை உண்மையான குறுந்தொழில் முனைவோர் களால் பெற முடியாமல் உள்ளது. 12 கிலோ  வாட்டுக்கு கீழ் மின்இணைப்பை பெற்றவர் களுக்கு உடனடியாக அரசின் வழிகாட்டலின் படி எல்டி3ஏ-1 மின்இணைப்பை மாற்றி வழங்கிட வேண்டும்.

மின்கட்டண உயர்வில் பயன்படுத்தும் யூனிட் கட்டணத்தை செலுத் துவதிலும் குறு சிறு தொழில் முனைவோர் கள் சிரமப்படுகிறோம். மின்சார வாரியத் தின் நெருக்கடிகளை புரிந்து கொண்டு உயர்த்தப்பட்ட யூனிட் கட்டணத்தை செலுத்துகிறோம். 112கிலோவாட் வரை பயன்படுத்தும் எல்டிசிடி பயனாளிகளுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 35 ரூபாயாக இருந்த  மாதாந்தர கட்டணம் 150 ரூபாய் வரை  உயர்த்தப்பட்டதால், மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறோம். இந்த நெருக்கடி யில் கிலோ வாட்டுக்கான கட்டணத்தை 300  சதவிகிதம் அதிகமாக செலுத்தி வருவதால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். குறு சிறு தொழில்களை பாதுகாப்பதற்கு கிலோ வாட்டுக்கான கட்டணத்தை 50 சதவீத மாக மாற்றி கிலோவாட்டுக்கான கட்ட ணத்தை நிர்ணயம் செய்தால், குறு சிறு  தொழில்களை பாதுகாப்பதற்கும் தொழில் களை நடத்துவதற்கும் பெறும் உதவியாக இருக்கும்.  அதேபோன்று, மாதாந்தரக்கணக்கெடுப்பு கட்டணத்தில் பீக்கவர் கட்டணமாக நாள்  ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு 15 சத விகிதம் கூடுதலாக பயன்படுத்தாத மின் சாரத்திற்கு செலுத்தி வருகிறோம். பீக்கவர்  கட்டணத்தை கணக்கிடும் தனிமீட்டர் இல் லாத நிலையும், வெறும் 8 சதவிகித லாபம்  கூட இல்லாமல் இயங்கும் தொழில் முனை வோர்களுக்கு கூடுதலாக பீக்கவர்க்கான கட்டணம் 15 சதவிகிதம் செலுத்தி வருவதி லிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  கோவை தொழில் அமைப்புகளின் கூட்ட மைப்பில் 22 தொழில் அமைப்புகள் ஒன்றி ணைந்து இந்த கோரிக்கையை மின்துறை அமைச்சருக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.