கம்பைநல்லூரில் வங்கி கிளை சிபிஎம் வலியுறுத்தல்
அரூர், ஜூன் 15- கம்பைநல்லூரில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை அமைக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் வட்டாரப் பகுதியில் ஏராளமான விவசாயிகள், வணிகர்கள், தொழில் முதலீட்டாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கம்பைநல்லூரில் குறைந்த எண்ணிக்கையில் வங்கிகள் இருப்பதால், நாள்தோறும் வங்கி சேவைக் காக பொதுமக்கள் காத்துக்கிடப்பதால், காலவிரயம் ஏற்படுவதோடு, அன்றாட பணிகளும் பாதிப்புக்குள்ளாகிறது. மேலும், கம்பை நல்லூர் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் பேரூராட்சியாகும். கம்பைநல்லூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக விவ சாயிகள் உள்ளனர். விவசாயிகள் வங்கி கடன், பயிர் கடன் பெறவும், மாணவர்கள் கல்வி கடன் பெறவும், தேசியமய மாக்கப்பட்ட வங்கி தேவைப்படுகிறது. மேலும், கம்பை நல்லூர் பேரூராட்சி ஏழை மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகின்ற னர். இந்த திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வங்கி கணக்கை துவக்க ஏதுவாக, பாரத ஸ்டேட் வங்கியின் கிளையை கம்பைநல்லூரில் தொடங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பொதுப்பாதையில் குழி தோண்டியதால் ஏரியில் இறங்கி செல்லும் அவலம்
தருமபுரி, ஜூன் 15- தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவர் அருகில் உள்ள கடத்திககொள்ளுமேடு பகுதியில், குத்தகைக்கு விவசாயம் செய்வதற்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு ஏக்கர் விவசாயம் நிலம் வாங்கி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு முனியப்பன், விஜயராகவன் என இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும், தனது உறவினர்களான கோபால், மாதேஷ் இருவரும் ஏரி யோரமாக வசித்து வந்தனர். இந்த நான்கு குடும்பத்தினரும் விவசாய நிலத்திற்கும், வீட்டிற்கும் செல்வதற்கு கிராம சாலையில் இருந்து ஏரிக்கரையின் மீதாக பொதுப்பாதையை பயன்படுத்தி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள சிலர், விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக பாதையை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். அந்தப் பாதையில் ஓரிடத்தில் மின்கம்பத்தின் ஸ்டே கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அந்த பாதையில் செல்ல முடியும். நான்கு சக்கர வாகனங்கள், விவசாயப் பணிகளை செய்வதற்கான வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மின்சாரத் துறையினர், மின்கம்பத்திற் கான ஸ்டே கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், கம்பம் இருக்கின்ற பகுதியில் மின்மாற்றி ஒன்று அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அப்பொழுது கிராமமக்கள் அருகில் இருந்த விவசாய நில உரிமையாளரான விஜயராகவனிடம் கேட்டுள்ளனர். ஆனால், தனக்கு இருப்பது 40 சென்ட் நிலம், அதில் ஏற்கனவே ஏழு இடங்களில் மின்கம்பங்கள் இருந்து வருகிறது. இதனால் தன்னால் முழுமையாக விவசாயம் செய்ய முடியவில்லை. என்னால் இடம் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏரிக்கரை பகுதி சாலையின் இரண்டு இடங்களில் ஜேசிபி இயந்தித்தின் மூலம் குழி வெட்டி வைத் துள்ளனர். மேலும், ஏரியை தூர்வாரும் பணியின் போது, ஜேசிபி இயந்திரம் மூலம், ஏரிக்கரை மீது முழுவதுமாக சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு மண்ணைக் கொட்டி வைத்துள்ளனர். இதனால் நான்கு குடும்பத்தினரும் ஏரி கரையில் செல்ல முடியாமல், ஏரியில் இறங்கி சென்று வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித் தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொது வழிப்பாதையை பயன்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப் பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பயிர்களை சேதப்படுத்தும் மக்னா யானை வனத்துறையின் மெத்தன போக்கு என குற்றச்சாட்டு
கோவை, ஜூன் 15 - ஆனைமலை புலிகள் காப்பகதற்கு உட்பட்ட பகுதிகளில் உளள தோப்புகளுக்குள் புகுந்து மக்னா யானை, பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும், வனத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த சரளபதி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்னா யானை தனியார் தோப்புகளுக்குள் தென்னை, மா போன்ற மரங்களை சேதப்படுத்தியது. இதனையடுத்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், தற்போது வரையில் மக்னா யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட முடியவில்லை. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், மக்களை அச்சுறுத்தும் யானையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், வனத்துறையினர் திணறுகின்றனர். திறமையான ஊழியர்கள் இருந்தும், வனத்துறை உயர் அதிகாரிகளின் மெத்தன போக்கால் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி, பொது மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வசிக்கும் பகுதிகளில் மக்னா யானையின் அச்சுறுத்தல் அதிக அளவில் இருப்பதால் அன்றாட விவசாய பணிகளை கூட மேற்கொள்ள முடியாத அவல நிலை உள்ளது. அமைச்சர்கள் வரும்பொழுது வனத்துறை உயர் அதிகாரிகள் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக மட்டுமே உள்ளனர். மக்னா யானையை கட்டுக்குள் கொண்டு வராமல் உயர் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். மக்களை அச்சுறுத்தும் யானையை லாவகமாக பிடித்து அதற்கான உணவுகளை அளித்து சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். இந்த மக்னா யானை டாப்சிலிப், வால்பாறை என எந்த இடத்தில் விட்டாலும், மீண்டும் ஊருக்குள் வந்து விடுகிறது. ஆகவே, இந்த மக்னா யானையை பிடித்து கும்கியாக மாற்றுவதற்கான பயிற்சி அளிக்க வேண்டும், என்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்ட எதிரொலி நியாயவிலை கடைக்கு விற்பனையாளர் நியமனம்
திருப்பூர், ஜூன் 15 - திருப்பூர், பெரியார் காலனி நியாய விலை கடையில் ஊழி யர் பற்றாக்குறையைத் தீர்க்க கோரி நடைபெற்ற போராட்டத் தின் எதிரொலியாக கூடுதல் விற்பனையாளர் நியமிக்கப்பட் டுள்ளார். திருப்பூர் 14 ஆவது வார்டுக்கு உட்பட்ட பெரியார் காலனி நியாய விலை கடையில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக இரண்டு கடைகளுக்கு ஒரு ஊழியர் என்ற முறையில் பணி யாற்றி வந்தார். மேலும், தினமும் கடைகளைத் திறப்பதிலும், பொருட்களை முறையாக விநியோகம் செய்வதிலும் மக்க ளுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, உடனடியாக கூடுதல் ஊழியர்களை நியமிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூன் 8ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், பெரியார் காலனி நியாயவிலை கடையில் கூடுதல் விற்பனை யாளரை திருப்பூர் வளர்மதி கூட்டுறவு சங்கம் நியமனம் செய் துள்ளது. இக்கோரிக்கை நிறைவேறுவதற்காக, போராட்டத் தில் பங்கேற்ற மக்களுக்கும், கோரிக்கையின் மீது நடவ டிக்கை எடுத்த வளர்மதி கூட்டுறவு சொசைட்டி நிர்வாகத் திற்கும் மார்க்சிஸ்ட் கட்சியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
ரூ.1.20 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி ஜூன்.15 - சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 20 விவசாயிகள் கலந்து கொண்டு 70 மூட்டை நிலக்கட லையை ஏலத்திற்கு கொண்டுவந்து இருந்தனர். சேவூர் சுற்று வட்டார வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். மறை முக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,300 முதல் ரூ.7,500 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,300 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.20 லட்சத்திற்கு ஏலம் நடைபெற் றது.
அசோக சக்ரா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர், ஜூன் 15 - இயற்கை சீற்றம், விபத்து, தீ விபத்து, திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளை தீவிரவாத ஊடுறுவல் ஆகியவற்றிலி ருந்து தனிப்பட்ட முறையில் பொதுமக்களைக் காப்பாற்றி வெளிப்படையான துணிச்சல், சுய தியாகம் மற்றும் துணிச்ச லான செயல் புரிந்தவர்களுக்கு அசோக சக்ரா விருது மத்திய அரசால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. பாதுகாப்பு பணியாளர்களைத் தவிர, அனைத்து பாலின குடிமக்களும், காவல் படைகள், மத்திய ஆயுத படைகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களும் இந்த விருதுக்கு தகுதியானவர்கள். தகுதி வாய்ந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகம், மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண்.36 ல், தொலைபேசி எண். 0421 2971168, உரிய படிவம் பெற்று ஜூன் 23 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கும்படி மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.
சமர்த் திட்டத்தில் ரூ.91 லட்சம் ஊக்கத் தொகை வழங்கல்
திருப்பூர், ஜூன் 15 - சமர்த் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு இல்லாத தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் தொழிலாளர் பயிற்சி நிலையங்களுக்கு 91 லட்சம் ஊக்க தொகை வழங்கப்பட்டது. ஒன்றிய அரசால் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்க, ‘சமர்த்’ திட் டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா முழு வதும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல், 2020க்குள், 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க, 1,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட் டது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் உள்ள, பயிற்சி நிலையங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத் தில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக பயிற்சி அளித்த நிறுவனங்களுக்கு, ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் ஏற்று மதியாளர்கள் சங்கத்தில் புதனன்று நடந்தது. ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியன், தமிழகத்தின் பல்வேறு மாநி லங்களை சேர்ந்த பயிற்சி நிலையங்களுக்கு, காசோலைகளை வழங்கினார். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் ‘சமர்த்’ திட்டத்தில், திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து, தொழிலாளர் உருவாக்கப்படுகின் றனர். முதல்கட்டமாக, 26 குழுக்களாகவும், இரண்டாம் கட்டமாக, 25 குழுக்களாகவும் பயிற்சி பெற்றுள்ளனர். இதற்காக 91 லட்சம் ஊக்க தொகை அளிக்கப்பட்டுள்ளது. இது வரை, 1,477 பேர் பயிற்சி நிறைவு செய்து, வேலையில் சேர்ந்துள்ளனர்; மேலும், 3,750 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர் என் றார்.
சுற்றுலா தளங்களில் மதி அங்காடி பெற அழைப்பு
திருப்பூர், ஜூன் 15 - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுற்றுலா தளங்களில் நடமா டும் மதி அங்காடி பெறுவதற்கு விண்ணக்க லாம் என மாவடட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் நடமாடும் மதி அங்காடியினைப் பெற கீழ்க்கண்ட தகுதிகளுடைய ஊராட்சி அளவிலான மற்றும் பகுதி அளவிலான கூட் டமைப்புகளிடமிருந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது. தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உத விக்குழு ஊராட்சி அளவிலான, பகுதி அளவி லான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத் தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் சுய உத விக்குழு தேசிய ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் அவசி யம். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையோராக இருக்க வேண்டும். தகுதியுடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து மற் றும் நகர்ப்புறங்களில் உள்ள பகுதி அளவி லான கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப் பங்கள் ஜூன் 20-க்குள் அறை எண்: 305, மகளிர் திட்டம் மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சி யர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. மேலும், உதவித் திட்ட அலுவலர்: 94440 94162 தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார்.
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
திருப்பூர், ஜூன் 15 – திருப்பூரில் புகையிலை விற்பனை மற்றும் கொலை மிரட் டல் வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மே 27 அன்று திருப்பூர் நகரில் புகையிலை விற் பனை தொடர்பாக சிலம்பரசன் (38), முருகன் (31) ஆகிய இருவருக்கும் கௌதம் என்பவருக்கும் இடையே வாக்குவா தம் ஏற்பட்டுள்ளது. இதில் சிலம்பரசன், முருகன் இரு வரும் கௌதமுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தெற்கு காவல் நிலையத் தார் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளை விக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறி, இருவரையும் ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அவிநபு புதனன்று உத்தரவிட்டார். 2023ஆம் ஆண்டில் மட் டும் இதுவரை 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை வைக் கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோவை கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எம்எல்ஏ அழைப்பு
திருப்பூர், ஜூன் 15 – தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் பாஜகவின் வளர்ச் சிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முட்டுக்கட்டை போட்ட தால் அவரைப் பழிவாங்கும் நோக்கத்தோடு ஒன்றிய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத் துறையை ஏவி விட்டு கைது செய்து துன்புறுத்தி உள்ளது. எனவே ஒன்றிய பாஜக அரசின் ஜனநாய விரோத, மக்கள் விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் நடைபெறவுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிக ளின் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் திமுகவினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான க.செல்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தெரு நாய் கடித்து 7 பேர் காயம்
சேலம், ஜூன் 15- சேலம் அருகில் தெரு நாய் கடித்து காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராள மான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதில், மேட்டூர் அணை பூங்காவை சுற்றிலும் உள்ள மீன் கடைகளில் இருந்து கொட் டப்படும் மீன் கழிவுகளை தின்பதற்காகவும், தூக்கணாம்பட்டி மாட்டு இறைச்சி கடைகளில் இருந்து கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தின்பதற்கும் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகிறது. இந்நிலையில் அனல் மின் நிலைய குடியிருப்பு அருகே நடந்து சென்ற இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேரை தெரு நாய்கள் கடித்தது. இதில் காயமடைந்த ஆரோக்கிய சாமி (66), பழனிசாமி (53),ரமேஷ் (45), செல்வம் (50), ராசப்பன் (55), வேசா (63), ராணி சந்திரா (45) ஆகிய 7 பேர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு, பின்னர் வீடு திரும்பினர். மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து, நாய்களின் எண்ணிக் கையை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
பூக்கள் விற்பனை மந்தம்
கோவை, ஜூன் 15- வரத்து குறைந்துள்ளதால், பூக்கள் விற்பனை மந்த மாக நடைபெற்று வருவதாக கோவையைச் சேர்ந்த பூக்கள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டுப்பாளையம் சாலையில் பூ மார்க்கெட் செயல்படு கிறது. தற்பொழுது வெயில் காரணமாக பூ விற்பனை மந்த மாக காணப்படுகிறது. இதன்படி வியாழனன்று நிலவரப்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.500க்கும், ரோஜா ரூ.240க்கும், செவ்வந்தி ரூ.260க்கும், அரளி ரூ.200க்கும் விற்பனை செய் யப்பட்டது. இதுதொடர்பாக பூ வியாபாரிகள் கூறுகையில், பூ வியாபாரத்தை பொறுத்த வரையிலும் ஒரு சூதாட்டம் போல தான். எப்போ ஏறும், இறங்கும் என்றே தெரியாது. சில நேரம் லாபம் கிடைக்கும். சில நேரங்களில் நட்டமாகும். பல ஆண்டு களாக வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்டு தான் பூ வியா பாரம் செய்து வருகிறோம், என்றார்.
ஒன்றிய அரசின் எதெச்சிகாரம் கண்டன கூட்டத்திற்கு பெருந்திரளாய் பங்கேற்க அழைப்பு
கோவை, ஜூன் 15- ஒன்றிய பாஜக அரசின் எதெச்சிகாரத்திற்கு எதிராக கோவை சிவானந்த காலணியில் வெள்ளியன்று (இன்று) மாலை 5 மணிக்கு நடைபெறும் கண்டன கூட்டத் திற்கு பெரும் திரளாய் பங்கேற்க வருமாறு திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத் துள்ளது. இதுகுறித்து, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாண்புமிகு மின் சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக-வின் ஜனநாயக விரோத போக்கு, மக்கள் விரோத போக்கு மற்றும் பழிவாங்கும் செயலை கண்டித்தும் தலை மைக் கழகம் அறிவிப்பின்படி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாஜக அரசு எதிர்க்கட் சிகளை பழிவாங்கும் வகையிலும், ஜனநாயக விரோத மாகவும் அமலாக்க துறை, வருமான வரி துறையை ஏவி விட்டு பொய் வழக்குகளை போட்டு வருகிறது. தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களின் வீடு, தலைமை செய லகத்தில் உள்ள அவரது அறை ஆகியவற்றில் அமலாக் கத்துறை சோதனை நடத்தியது . சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் இந்த எதெச்சிகார நடவடிக்கையை கண்டித்து நடைபெறும், “மாபெரும் கண் டனப் பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி , காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி , மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் , விசிக கட்சி செயலாளர் திருமாவளவன், திராவிட கழகம் தலைவர் வீரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர்மொஹிதீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹி ருல்லா , தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கண்டன கூட்டத்திற்கு பெரும் திரளாய் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள் ளனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு கர்ப்பிணி தர்ணா முன்னாள் முதல்வரின் சகோதரர் மீது புகார்
சேலம், ஜூன் 15- மகளிர் சுய உதவிக் குழுவில் இருந்து நீக்கிவிட்டு தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் முதல் வர் எடப்பாடி பழனிச்சாமி தம்பி மீது நடவ டிக்கை எடுக்க கோரி நிறைமாத கர்ப்பிணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி கோனேரிப் பட்டி பகுதியை சேர்ந்த சத்யா அவரது தாய் சோலையம்மாள். இவரது அண்ணன் சதீஷ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கோனேரிப் பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மகளிர் சுய உதவி குழுவில் நாங்கள் இருந்து வந்தோம். கடந்த ஆண்டு வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டு எங்கள் குழுவிற்கு 10 லட்சம் ரூபாய் கடன் வந்தது. இந்நிலையில், எங்கள் குழுவில் இருந்து சோபியா மேரி என்ற பெண் விலகி னார். இதனால் குழுவில் பிரச்சனை ஏற்பட் டது. இது குறித்து கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின் தம்பியுமான பந்தா குமாரிடம் கேட்ட போது, நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் என்னையும், எனது தாயையும் மிகவும் கேவலமாக அருவருக்கத்தக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், தற்போது வந்துள்ள மகளிர் சுய உதவி குழு கடன் 10 லட்சம் ரூபாயை எங்களுக்கு பிரித்து தராமல் எங்களை குழுவில் இருந்து நீக்கி விட்டு அவர்கள் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேரை அந்த குழுவில் இணைத்துள்ளனர். எங்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து வெளியேற்றினர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களுக்கு நீதி வேண்டி ஆட்சியர் அலு வலகத்தில் அதிகாரியை சந்தித்து மனு அளித்ததாக தெரிவித்தனர்.
நகை பறிப்பு
கோவை, ஜூன் 15- கோவை, தலைமை வெரைட்டிஹால் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மசச் காரணி (50). சம்பவத்தன்று இவர் ராஜவீதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த நபர், முகவரி கேட்பது போல் நடத்து, மசக்காரணி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றார். இதுகு றித்து அவர் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய் தார். புகாரின் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.