districts

img

நலவாரிய பண பலன்களை அதிகரிக்க வேண்டும்

கோவை, ஜூலை 22- நலவாரிய பண பலன்களை அதி கரிக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என சிஐடியு கோயமுத்தூர் தங்க நகை தொழிலாளர் யூனியன் வலியு றுத்தி உள்ளது. கோயம்புத்தூர் தங்க நகை  தொழிலாளர் யூனியனின் 10  ஆவது  பேரவை கோவை செட்டி வீதியில்  உள்ள கொங்கு மஹால் பி.கே.சுகு மாரன் நினைவரங்கம், வி.கணேசன் நினைவு நுழைவாயிலில் வியாழ னன்று நடைபெற்றது. எம்.என்.கண் ணன் தலைமையில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் எம்.ஞானசேகர் வரவேற்புரையாற்றினார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறு முகம் துவக்கிவைத்து உரையாற்றி னார். இதில், தமிழ்நாடு சாலை போக் குவரத்து தொழிலாளர் சம்மேளனத் தின் மாநில பொதுச்செயலாளர் எஸ். மூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதில், அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச கூலியை தங்கநகை தொழிலுக்கு வழங்க வேண்டும். நலி வடைந்த தங்கநகை தொழிலாளர் களுக்கு இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும். நலவாரிய பணப் பயன்களை அதிகப்படுத்த வேண் டும். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ஆண், பெண் இருபாலருக்கும் மாதம் ரூ.21 ஆயிரம் என்பதை உறு திப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவராக எம்.என்.கண்ணன்,  செய லாளராக பி.சந்திரன், பொருளாள ராக பி.மருதன் உட்பட 19 பேர்  கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட் டது.