திருப்பூர், ஜூன் 6– குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீர மைக்காவிட்டால் படகு விடும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோட்டத்துப்பாளையத் தில் தட்டி வைக்கப்பட்டுள்ளது. இதைய டுத்து சாலையில் அவசர அவசரமாக மண் கொட்டப்பட்டு கழிவுநீர் தேங்கி நின்ற குழிகள் மூடப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் தோட்டத்துப்பாளையம் இடையே, மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த சாலை குழிகளில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத் திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் சாலையை சீரமைக்காவிட்டால் ஜூன் 8 ஆம் தேதி படகு விடும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் சாலையின் ஓரத்தில் தட்டி வைக்கப்பட் டது. இதையடுத்து காவல் துறையினர் மாந கராட்சி நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். இதன்படி இந்த சாலையில் உள்ள குழிகளில் மாநகராட்சி பணியாளர்கள் மண்ணைக் கொட்டி சமன் செய்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகா மணி கூறுகையில், பலமுறை இந்த சாலையை சீரமைக்க கோரி மனு அளித்துள் ளோம். திருமுருகன் பூண்டி காவல் ஆய்வா ளரின் முயற்சியில் தான் இரவோடு இர வோடு இந்த குழி மூட்டப்பட்டுள்ளது. இது போல் மண் கொட்டுவது இது முதல் முறை அல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரம் நடும் போராட்டத்தை நடத்தினோம். அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் சீரமைக் கப்பட்டது. ஆனால் மழை நீர் மற்றும் கழிவு நீர் வெளியேற்றும் வடிகால்கள் அமைக்கப்பட வில்லை. எனவே, மீண்டும் சாலையில் நீர் தேங்கி சாலை குண்டும் குழியுமாக மாறியது. இதுபோல் மண் கொட்டும் தற்காலிக நடவ டிக்கைகள் பலமுறை மேற்கொள்ளப்பட் டுள்ளது. இதற்கு ஒரே தீர்வு ஏபிஎஸ் பள்ளி முதல் வாவிபாளையம் வரை உள்ள சாலையை நெடுஞ்சாலைத்துறை மொத்த மாக சீர் செய்ய வேண்டும். மாநகராட்சி சார் பில் சாலையின் இருபுறமும் மழை நீர் வடி கால் அமைத்தால் மட்டுமே மழை நீர் மற் றும் கழிவு நீர் தேங்காமல் இருக்கும். மேலும் சாலை பதிப்புக்கு உள்ளாகாது. எனவே நிரந்தர தீர்வு கோரி திட்டமிட்டபடி படகு விடும் போராட்டம் நடத்தபடும் என்று கூறினார்.