பொள்ளாச்சி, ஜூன் 7- ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் யானையின் எலும்புக்கூடு வனத்துறையின ரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக் குட்பட்ட ஆறு வனச்சரகங்கள் உள்ளது. இதில், உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட டாப்சிலிப் பகுதியில் காட்டு யானை, புள்ளிமான், காட்டு மாடு, சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்கு கள் அதிகம் உள்ளன. இந்நிலையில், பரம்பிக்குளம் பெரி யார் புலிகள் காப்பகம் பகுதியில் வனத்துறையினர் திங்க ளன்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூணக்கடவு அணையின் ஓரம் இறந்த யானை யின் எலும்புக்கூடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த வனச் சரகர் காசிலிங்கம், வேட்டை தடுப்பு காவலர்கள் யானையின் எலும்புக்கூடை கைப்பற்றி, மரபணு பரிசோதனைக்காக சென்னை அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வு முடிவுகள் வந்த பின்பு தான் யானையின் இறப்பு குறித்து தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.