தருமபுரி, மார்ச் 18- தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து திப்பம்பட்டி வழியாக சனியன்று காலை கம்பைநல்லூர் நோக்கி ஒற்றை யானை உலா வந்தன. அப்படி உலா வந்த இந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் பொது மக்கள் விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்த நிலையில் கெளவல்லி கிராமத்தில் உள்ள பகுதிகளில் உணவைத் தேடி ஏரி கரையை கடக்கும் பொழுது மின்சாரக் கம்பியில் யானை உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இந்த ஆண் யானை உயிரிழந்தது. ஏற்கனவே இரண்டு வாரத்திற்கு முன்புதான் மாரண்ட அள்ளி அருகே சுற்றித்திறிந்த 5 யானைகளில் இரண்டு குட்டி யானைகளை தவிர மீதம் உள்ள மூன்று யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இந்த நிலையில் சனியன்று ஒற்றைக் காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரி ழந்திருக்கின்றன. உயிரிழந்த யானையை உடற்கூறாய்வு பணியில் வனத்துறையினர், கால்நடைதுறையினர் உள்ளிட்டோர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதத்தில் பென்னாகரம், இண்டூர், பாப்பாரப்பட்டி பல்வேறு பகுதிகளில் இரண்டு யானைகள் சுற்றி திரிந்து வந்தன. இரண்டு யானைகளில் ஒரு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு முதுமலை வனப்பகுதியில் விடப் பட்டது. இந்த மக்னா யானையுடன் சுற்றித்திரிந்த யானை தனியாக பரிதவித்த நிலையில் தனது நண்பனை தேடி அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த நிலையில் இந்த யானை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.