districts

img

சாலையை மறித்த யானை

ஈரோடு, ஜூலை 20- சத்தியமங்கலம் அருகே நடுரோட்டை மறித்து நின்ற 3  காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்  சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என் பாளையம், விளா முண்டி, ஆசனூர், தலமலை, தாளவாடி, கடம்பூர், கெட்ட வாடி, கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வரு கின்றன. சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி வரும்  யானைகள் சாலையில் செல்லும் லாரியை மறித்து கரும்பு களை ருசிப்பதும் தொடர்கிறது. இதனால், இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.  இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் அருகே 3 காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந் துள்ள சாலையில் வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள்  ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டனர். யானை கூட்ட மானது சிறிது நேரம் வாகனங்களுக்கு வழி விடாமல் சாலை யிலேயே நின்றது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக  யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில்  வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பிறகு 3 யானைகள் மெல்ல மெல்ல நகர்ந்து சாலையை கடந்து சென்றது. பிறகு  வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.