தருமபுரி, ஜன.5- மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட் டுக்குழு சார்பில் தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தனியார்மயத்துக்கு எதிராக போராடும் மகாராஷ்டிரா மின்சார ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்களின் கூட்டுக்குழு சங்கங்கள் சார்பில் தரும புரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் பி.ஜீவா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தீ.லெனின் மகேந்தி ரன், பொருளாளர் வெ.சீனிவாசன், சம்மேளன துனைத் தலைவர் தேவராஜன், ஏஐசிசிடியு மாநிலத்தலைவர் சி.முரு கன் உள்ளிட்ட மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.