சேலம், மே 16- அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங் கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட் டூர் அனல் மின் நிலையம் முன் பாக மின்வாரிய கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு குறித்து பேசி தீர்வு காணவேண்டும். 35 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல முறையில் செயல்பட்டு வரும் மின் வாரிய அனல் மின் நிலையங்க ளுக்கு தேவையான நிலக்கரியை வழங்காமல் அனல் மின் நிலை யங்களை மூடுவது மற்றும் தனியாரி டம் மின் உற்பத்தியை முழுமையாக ஒப்படைப்பது போன்ற நடவடிக்கை களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஐஎன்டியூசி மாநில சங்க பொரு ளாளர் எஸ். பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மின் ஊழியர் மத் திய அமைப்பின் மாநில துணை பொது செயலாளர் வி. இளங்கோ, தொழிலாளர்கள் ஐக்கிய சங்கத் தின் மாநில இணைச் செயலாளர் குணசேகரன், எம்பிளாய்ஸ் பெடரே ஷன் நிர்வாகி தெய்வன், டாக்டர் அம் பேத்கர் பொறியாளர் தொழிலாளர் சங்க கிளை செயலாளர் அருண கிரி, மின்சார தொழிலாளர் சம்மே ளன மாநில இணைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். முடிவில், சிஐடியு கிளைத் தலைவர் செல்வகணபதி நன்றியுரையாற்றி றினார்