districts

img

பிபி2டி உத்தரவை ரத்து செய்திடுக

கோவை, ஏப்.25– மின்வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வாரியத் தின் மூலம் கொடுக்கப்படும் கடன் உள்ளிட்ட சட்டப்படியான உரிமை களை மறுக்கும் பிபி2டி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியு றுத்தி மின்வாரிய தொழிற்சங்க கூட்டு  நடவடிக்கைக்குழுவினர் கோவையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தில் பணியாற்றுபவர் களுக்கு வீடுகட்ட முன்பணம், கல்வி  கடன், வாகனம் வாங்க கடன் உள்ளிட்ட வைகள் வாரியத்தின் மூலம் வழங்கப் பட்டு வந்தது. இந்த தொகையை ஊழி யர்களின் ஊதியத்தில் மாதம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்துள்ளது. மின் வாரியத்தின் நட்டத்திற்கு ஊழியர் களோ, பொறியாளர்களே, அலுவலர் களே எந்த வகையிலும் காரண மில்லை.  இந்நிலையில், ஊழியர்களின் நல னுக்கு எதிரான இந்த பிபி2டி உத்த ரவை ரத்து செய்ய வேண்டும். 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய  உயர்வை உடனடியாக வழங்க வேண் டும். வேலைப்பளு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரிவுகளுக்கு மின் இணைப்பு எண்ணிக்கையின் அடிப் படையில் வட்டங்கள் மற்றும் மண்ட லங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மின்வாரிய அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வினர் கோவை சிவானந்தா காலனி மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர்.