districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு

தருமபுரி, செப்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு கள் நடைபெற்று, செயலாளர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட் டம், பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட கிளைகளில் மாநாடுகள் நடைபெற்று, செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, ஊட்டலை மஞ்சகாய குடம்பு கிளைச் செயலாளராக முருகன், ஒகேனக்கல் கிளைச் செயலாளராக மாரிமுத்து, மடம் காட்டுக் கொள்ளை கிளைச் செயலாளராக ஜெயபிரகாஷ், மடம் காவேரி ரோடு கிளைச் செயலாளராக வேலன், மடம் ஏ.கிளைச் செயலாளராக முருகன், பி.கிளைச் செயலா ளராக துரை, தாசர்குந்தி ஏ.கிளைச் செயலாளராக ஆறு முகம், பி.கிளைச் செயலாளராக வடிவேல், தாசர்குந்தி  ஜீவாநகர் கிளைச் செயலாளராக மாது, தொட்டிப்பள் ளம் கிளைச் செயலாளராக சுப்பிரமணி, கள்ளிபுரம் கிளைச் செயலாளராக கமலா, ஜங்கமைனூர் கிளைச் செயலாளராக கோவிந்தன் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். இம்மாநாடுகளில் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ.ஜீவா னந்தம், அன்பு, சிவா மற்றும் ஞானவள்ளி, தேவன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

குட்கா விற்பனை: 44 கடைகளுக்கு ‘சீல்’

சேலம், செப்.26- சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 44 கடை களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். சேலம் மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற் பனை செய்யும் கடை உரிமையாளர்களை காவல் துறை யினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட கடைகளை பூட்டி ‘சீல்’ வைக் கும் பணியை காவல் துறையுடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மாநகரத்தில் சேலம் உணவுப் பாதுகாப்பு துறையினர் 600க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, புகையி லைப் பொருட்களை விற்பனை செய்த 44 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர். அங்கிருந்த 437 கிலோ குட்கா, புகை யிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

164 வாகனங்கள் பறிமுதல்

சேலம், செப்.26- சேலம், தருமபுரியில் தகுதிச்சான்று, உரிமம் உள் ளிட்ட விதிகளை மீறி இயக்கிய 164 வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட் டங்களில் சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு  நடவடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சேலம் சர கத்திற்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் அனைத்து  வாகனங்களுக்கும் முறையான உரிமம் உள்ளனவா,  விதிமுறைக்குட்பட்டு இயங்குகின்றனவா? என சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மாதத்தில் அந்தந்த வட்டா ரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், விதிமுறைகளை மீறி இயக்கிய 1,638 வாகனங்களுக்கு  ரூ.84 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகை யில், சேலம் சரகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத் தப்பட்ட சோதனையில், தகுதிச்சான்று இல்லாமல் இயக் கியது, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், உரிமம் இல்லா மல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 56 லாரி, 29 ஆட்டோ உள்ளிட்ட 164 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டன, என்றனர்.

சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

சேலம், செப்.26- மேட்டூர் அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிப்பது வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஆட்சியர் ரா.பிருந்தா தேவி ஆய்வு செய்தார். சேலம் மாவட்டம், மேட்டூர், தின்னப் பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதும், கால்நடைகளை சேதப்ப டுத்துவதும் வனத்துறையால் கண்டறி யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட வனத்துறை அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு, சிறுத்தையை கண்காணித்து பிடிக்க  பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். அதன்படி, மேட் டூர் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க 6 கூண்டு கள் வைத்தும், 3 டிரோன் கேமராக்கள், 16 கண்காணிப்புப் கேமராக்கள் பொருத் தப்பட்டு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வனத்துறையின் சார்பில் 80 வனத்துறையினர் இரவு, பகல் என 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக வனத் துறையினர் மேற்கொண்டுள்ள நடவ டிக்கைகள் குறித்து வெள்ளக்கரட்டூர், புதுவேலமங்களம் கிராமங்களில் புத னன்று இரவு மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி ஆய்வு செய்தார். அப்போது சிறுத்தையின் நடமாட் டம் குறித்தும், சிறுத்தையை பிடிக்க  மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை கள் குறித்தும் வனத்துறை அலுவலர் களிடம் கேட்டறிந்து, தேவைக்கேற்ப கூடுதலான கூண்டுகள் வைத்து கண்கா ணிக்கவும், அறிவுறுத்தினார். அதே போன்று, வனத்துறையினரால் மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார். இந்த ஆய் வின்போது, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி, மேட்டூர் சார் ஆட்சி யர் நே.பொன்மணி, உதவி வன பாது காவலர் செல்வக்குமார் ஆகியோர் உட னிருந்தனர்.

குற்றவாளி தப்பிக்க முயற்சி

சேலம், செப்.26- சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிக்க முயன்ற கொலை வழக்கில் தொடர்புடைய நபரை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். சேலம் மாவட்டம், கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த  ஜான் என்பவர் மீது, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன. இவர் சேலத்தில் கொடூரமாக நடை பெற்ற செல்லதுரை கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கு களில் தொடர்புடையவர். இந்நிலையில், நிலுவையில் உள்ள  வழக்கில் பிடிவாரண்ட் போடப்பட்ட நிலையில், ஜான் சேலம் நீதிமன்றத்திற்கு வியாழனன்று வந்தார். அவரை விசா ரிக்க காவல் துறையினர் வந்திருந்த தகவல்களை தொடர்ந்து ஜான், அங்கிருந்து தப்ப முயன்றார். இதனை அறிந்து சுதாரித் துக் கொண்ட காவல் துறையினர், அவரை சுற்றி வளைத்து பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுபான்மையினரை பாதுகாக்கும் தமிழக அரசு!

சேலம், செப்.26- சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை  நிலைநாட்டுவதில் தமிழக அரசு சிறப்பாக  செயல்பட்டு வருகிறதென, சிறுபான்மையி னர் ஆணையத் தலைவர் ஜோ.அருண் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக் கலந்துரையாடல் கூட்டம், சேலம்  மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணை யத் தலைவர் ஜோ.அருண் பேசுகையில், இந்தியாவிலேயே சிறுபான்மையின மக் களை சிறப்பாக வழிநடத்தும் முதன்மை மாநி லமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. சிறு பான்மையின மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கும், அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து நலத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்திட வும் சிறுபான்மையினர் ஆணையம் செயல் பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் சிறு பான்மையினர் மக்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உலமாக்கள் மற் றும் பணியாளர்கள் நல வாரியத்தில் 400 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், 130 பயனாளிகளுக்கு ரூ.10.24 லட்சம்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 291 பயனாளிகளுக்கு ரூ.14.97 லட்சம் மதிப்பி லான மிதிவண்டிகளும், வக்ஃப் நிறுவனங்க ளில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய  இருசக்கர வாகனம் வாங்க 9 பயனாளிக ளுக்கு ரூ.2.25 லட்சம் மானியமும் வழங்கப் பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர் கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகி றது. மேலும், சிறுபான்மையின மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட தனிந பர் கடன், சிறு வணிகக் கடன் மற்றும் கல்விக்  கடன் ஆகியவை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 1,163 பய னாளிகளுக்கு ரூ. 5.57 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கிறிஸ் துவ தேவாலயங்கள் புனரமைக்க தமிழ்நாடு அரசின் மூலம் நிதியுதவிகள் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், கிறித்தவர்களின்  பயன்பாட்டிற்காக கல்லறைத் தோட்டம் முஸ் லீம்களின் பயன்பாட்டிற்காக கபர்ஸ்தான் அமைத்தல் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மை யின மக்களுக்கான முழுமையான பாது காப்பையும், உரிமைகளையும் நிலைநாட்டு வதில் தமிழக அரசு முனைப்புடன் செயல் பட்டு வருகிறது, என்றார்.

இலவச வீட்டுமனைப் பட்டா: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர், செப்.26- ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா  வழங்க நிலம் எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர்  மாவட்டத்துக்குள்பட்ட கிராமப்புற பகுதிகளில் சொந்தமாக  வீடோ, நிலமோ இல்லாத ஆதிதிராவிடர் இன மக்களுக்கு  மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவிலான தனி யார் நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலம் கிரையம் செய்யப்பட்டு இலவச வீட்டுமனை பட்டா  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது  தொடர்பாக 2024, 2025 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் இன  மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் வகையில்  நிலம் எடுப்புப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அரசு நிர்ணயிக்கும் தொகைக்கு நிலம் வழங்க  விருப்பமுள்ள நில உரிமையாளர்கள் உரிய ஆவணங் களுடன் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். மேலும்,  73388-01274 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ள லாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பெண்கள் புகார் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு

திருப்பூர், செப்.27–  திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் பெண் மருத்துவர் கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் புகார்  தெரிவிப்பதற்காக ஷீ பாக்ஸ் என்ற  “அவள் பெட்டி” ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மாதம் மருத்துவக் கல்லூரியில் மருத்து வப் பயிற்சி மாணவி பாலியல் வன்கொ டுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை  செய்யப்பட்டார். இது நாடு முழுவதும்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி யது. பணியிடங்கள் மற்றும் கல்லூரிக ளில் பெண்களின் பாதுகாப்பு குறித்த  மிகப்பெரும் விவாதத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு நட வடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.  திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இச்சம்பவத்தை தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையாளர் தலைமையில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவக் கல் லூரி மாணவிகள் மற்றும் மருத்துவ மனை செவிலியர்களிடம் பாலியல்ரீதி யான தொந்தரவு அல்லது அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியான நபர்க ளின் நடமாட்டம் இருந்தாலோ அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியில் உள்ள காவலர்களிடம் உடன டியாக புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், மருத்துவக்கல்லூரிக்கு வரும் மருத்துவ மாணவிகள் மற்றும்  செவிலியர்களுக்கு ஏதேனும் அசம்ப வாவிதம் நிகழ்ந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கும் வகையில் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப் பான பணி சூழல் நோக்கி பெண்கள், சகித்துக் கொள்ளாதீர்கள் குரலை உயர்த்துங்கள் என்ற தலைப்பில் அப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பதாகையில் பணியிடங்களில்  பெண்களுக்கு எதிரான பாலியல் துன்பு றுத்தல் சட்டம் 2013 குறித்து தெரி விக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பணியிடத்தில் துன்புறுத்தலை எதிர் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் அதில் கொடுக்கப் பட்டுள்ளது. சம்பவத்தை ஆவணப்ப டுத்த வேண்டும்.  சம்பவம் நடந்த தேதி,  நேரம் மற்றும் சாட்சிகள் உட்பட சம்பவங் களை பதிவு செய்து வைத்திருக்க வேண் டும். அரசு உள் நிறுவன புகார் குழுவுக்கு  உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.  தங்களுக்கு மேல் உள்ள மனிதவள மேலாளர் மற்றும் ஐசிசி புகார் குழுவுக்கு  உடனடியாக புகார் தெரிவிக்கலாம். ஷீ -  பாக்ஸ் (அவள் பெட்டி)  எனப்படும் ஆன் லைன் மூலமாகவும் புகாரை பதிவு  செய்யலாம். மேலும் இலவச தொலை பேசி எண்களாக குழந்தைகளுக்கு 1098,  பெண்களுக்கு 181, முதியவர்களுக்கு 14 567 என்ற எண்ணிலும், உள் நிறுவன புகார் குழு தொடர்பு எண்ணாக 98944  60190 என்ற எண்ணுக்கும் புகார்  தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

மருத்துவமனையில் மின் மோட்டார் பழுது தண்ணீர் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதி

கோபி, செப். 26- கோபி அரசு மருத்துவமனையில் மின்மோட் டார் பழுது காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற் பட்டு நோயாளிகள் அவதியடைந்து வருகின்ற னர். ஈரோடு மாவட்டம் கோபி அரசு மருத்துவ மனையில் பொதுமருத்துவம் அவசர சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மருத்துவமனையில்  உள்நோயாளிகளுக்கும்,  மகப்பேறு மருத்துவத்திற்கும் 100க்கும் மேற்பட்ட  படுக்கை வசதிகள் கொண்ட தனி தனி கட்டடங்க ளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனையில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலமாக தண்ணீர் வினியோகம் செய் யப்பட்டு வருகிறது.  இதில் தண்ணீர் வினியோகம் செய்யும் கிணற் றின் மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த மூன்று  நாட்கள் சீரான தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரு கின்றனர்.  மேலும், மின்மோட்டார் பழுது நீக்க இரண்டு நாட்கள் ஆகும் என்ற நிலையில், புதனன்று வாக னம் மூலம் தண்ணீர் வாங்கப்பட்டு வினியோகித் துள்ளனர். அது சில மணி நேரத்திலேயே காலி யனாதால் மருத்துவமனை வாளாகத்தினுள் தண் ணீர் தட்டுபாடு ஏற்பட்டு நோயாளிகள் மற்றும்  உடனிருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். எனவே, அதிகாரிகள் உடனடி நடவ டிக்கை மேற்கொண்டு குடிநீர் மற்றும் கழிப்பறை களுக்கு சீரான தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை பொறுப்பு மருத்துவரிடம் கேட்ட போது மின்மோட்டார் பழுது நீக்க தெரி விக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக தண்ணீர் தட்டுபாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நூறு நாள் வேலைக்கு மூதாட்டியிடம் லஞ்சம்

நாமக்கல், செப். 26- நூறு நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்டலாடம்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 524 பேர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாளர்களாக உள்ளனர். ஒவ்வொரு வாரத்திற்கும் வந்து வேலை செய்பவர்களில் யார் ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரு கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மூதாட்டி யிடம் 100 நாள் வேலைக்கு அடையாள அட்டை வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற செயலர் தங்கதுரையை  நாமக்கல் ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவின் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழு கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: அமைச்சர் மகிழ்ச்சி

கோவை, செப்.26- செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது நல்ல செய்தி, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று இன்றைக்கு நிறைவேறியுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவையில், செய்தியாளர்களிடம் பேசுகையில்,  செந் தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்து இருப்பது நல்ல செய்தி. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. உச்ச நீதிமன்றம் நல்ல முடிவாக கொடுத்து உள்ளது. இதற்கு முன்னால் பல சிரமங்க ளும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனை களும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், இன் றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.