தருமபுரி, ஏப்.14- திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு வாக் குசேகரித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின் றனர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் போட் டியிடும் திமுக வேட்பாளர் ஆ. மணியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சியில் வாக்குசேக ரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு வட் டச் செயலாளர் தி.வ.தனுசன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், கிளைச் செய லாளர் செல்வம், வாலிபர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் குறளரசன், மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் குப்பன், மாவட்டத் தலைவர் சினேகா உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணி துவங்கி படித்த இளைஞர்களுக்கு கண்ணியமான வேலை உருவாக்க வும், எரிபொருட்களின் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்ப டும். விவசாயிகளின் விளை பொருட்க ளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வும், இந்திய அரசியலமைப்பு சட் டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆ.மணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், என்று வாக்கு சேகரித்தனர்.