கோவை, மே 15- நில அபகரிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். கோவை, கோவில்பாளையம் எஸ்எஸ் குளம் பகுதியை சேர்ந்த முதியவர் ராஜேந் திரன். இவருக்கு குன்னத்தூர் பகுதியில் ஒன் றரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எல்ஜிபி என்ற தனியார் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு அபகரித்து விட்டது. இது குறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித் துள்ளார். இதையடுத்து, விசாரணையின் அடிப்படையில், அந்த நிலம் முதியவருக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை நிலத்தை அதிகாரிகள் மீட்டுத் தரவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனு அளித்து விட்டு வெளியில் வந்த அவர் திடீரென ஆட்சியர் அலுவலக வளா கத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், பல வருடங்களாக தனது நிலத்தை அதிகாரிகள் மீட்டு தராமல் இழுத்தடித்து வருவதாகவும், இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்திருப்பதா கவும் தெரிவித்தார். இது குறித்து தமிழ்நாடு முதல்வரிடமும் மனு அளித்திருப்பதாக கூறி னார்.