மார்ச் 14 ஆம் தேதி கல்விக்கடன் முகாம் கோவை, மார்ச் 9- கோவையில் மார்ச் 14 ஆம் தேதியன்று கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளதென மாவட்ட ஆட் சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட் சியர் அலுவலக கூட்டரங் கில் வியாழனன்று, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யாதேவி, ரிசர்வ் வங்கி யின் உதவி பொது மேலாளர் அமிர்த பாலசுப்பிரமணியம், கனரா வங்கி துணை பொது மேலாளர் ஷோபித் அஸ்தனா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலைராவ், மக ளிர் திட்ட இயக்குநர் செல்வம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசுகையில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயிலுவதற் கான கல்வி கடன் வழங்கும் முகாம் மார்ச் 14 ஆம் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை வங்கியாளர் கள் ஏற்படுத்த வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து 2021 - 2022 ஆண்டில் சுயஉதவிக்குழுக் களுக்கு அதிகளவில் கடனுதவி வழங்கிய கனரா வங்கிக்கு மாவட்ட அளவில் சிறந்த வங்கிக்கான முதல் பரிசும், இந்தியன் வங்கி 2 ஆம் பரிசும், ஹெச்டிஎப்சி 3 ஆம் பரிசும், மாவட்ட அள வில் சிறந்த வங்கிக்கிளைகள் இந்தியன் வங்கி மைக்ரோ சேட் வங்கிக்கு முதல் பரிசும், கனரா வங்கி மைக்ரோ பைனான்ஸ்க்கு 2 ஆம் பரிசும், பொள்ளாச்சி ஹெச்டிஎப்சி வங் கிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.