districts

img

தேர்தல் காலம் என்பதால், பாக்குமட்டை தட்டு ஏற்றுமதி அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளை யம், குமாரபாளையம், சங்ககிரி சாலை உள் ளிட்ட பகுதிகளில், பரவலாக பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற் சாலைகள் செயல்பட்டு வருகின்றன. கர்நா டகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாக் குமட்டைகள் மொத்தமாக வாங்கப்பட்டு, சிறி யது முதல் பெரியது வரை பல்வேறு வடிவங்க ளில் பாக்குமட்டை தட்டுகள் தயார் செய்யப் பட்டு வெளி மாவட்டங்களுக்கு மற்றும் உள் ளூர் கோவில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட  விசேஷங்களுக்கு பாக்குமட்டை தட்டுகள் அனுப்பப்பட்டு வருகிறது. மிகச்சிறிய அளவி லான பாக்குமட்டை தட்டு 75 பைசா முதல்  பத்து ரூபாய் வரை பல்வேறு வடிவங்களில் தட்டுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது ஏப்.19 ஆம் தேதி தமிழகத்தில்  ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடை பெறுகிறது. தேர்தல் பரப்புரைக்காக செல் லும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்க ளுக்கு உணவுகள் வழங்குவதற்கு பாக்கு மட்டைகள் தட்டு தேவை தற்போது அதிக ரித்துள்ளது. இதுகுறித்து பள்ளிபாளையம் -  சங்ககிரி சாலையில் பாக்கு மட்டை தட்டு கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி  வரும் அருண் என்பவர் கூறுகையில், பொது வாகவே பங்குனி மாத காலகட்டங்களில் அதி களவு உள்ளூர் கோவில் திருவிழாக்கள் நடை பெறும். உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்தவர் கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்க ளுக்கு அன்னதானம் அளிக்க விரும்பும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல் வேறு தரப்பினர் எங்களிடம் வாடிக்கையாக பாக்கு மட்டை தட்டுகளை வாங்குவது வழக் கம். அதற்கேற்ற வகையில் நாங்களும் உட னுக்குடன் அவர்களுக்கு ஆர்டர் பேரில் பாக் குமட்டை தட்டுகளை மொத்தமாகவும், சில்ல றையாகவும் கொடுத்து வருகிறோம். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் கால கட்டங்களில் வீடு, வீடாக சென்று பொது மக் களை சந்தித்து வாக்குகளை சேகரித்து தேர் தல் பணியாற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்களுக்கு உணவு வழங்குவதற் கென தற்போது அதிகளவு தட்டுகள் தேவை  என அரசியல் கட்சியினர் ஆர்டர் கொடுத்து  வருகிறார்கள். இதன் காரணமாக வழக்க மாக செய்யும் வேலைகளை காட்டிலும், தற் போது கூடுதல் பணிகளை செய்து தட்டுகளை தயாரித்து கொடுத்து வருகிறோம். பாக்கு மட்டை தட்டுகள் பயன்படுத்த எளிது மற்றும்  இயற்கை சூழலுக்கு ஏற்றது என்பதால் பல ரும் பாக்குமட்டை தட்டுகளை வாங்க விரும் புகின்றனர். இந்த தேர்தல் திருவிழாவில் பாக்கு மட்டை தட்டுகள் தேவை அதிகரிப் பால் எங்கள் தொழிற்கூடத்தில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் எனக்கு கணிசமான முறையில் லாபம்  கிடைக்கும் என மகிழ்ச்சி பொங்க தெரிவித் துள்ளார். -பிரபாகரன், நாமக்கல்

;