கடந்த ஓராண்டில் 3,436 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து
சேலம், மார்ச் 30- சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சாலை விதிகளை பின்பற்றாத 3,436 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரி வித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாது காப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் ஆட்சியர் செ.கார் மேகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசு கையில், பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்பு களை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை விபத்துகளே இல்லாத மாவட்டமாக சேலம் மாவட் டத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன் படுத்தாமல் இருப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது போன்ற சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். இதை வலியுறுத்தி சாலைகளின் முக்கிய இடங் களில் விளம்பர பதாகைகள் மற்றும் ஒலிப்பெருக்கிகள் மூலம் வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சாலை விதிகளை முறை யாக பின்பற்றாமல் வாகனம் ஓட்டிய 3 ஆயிரத்து 436 பேரின் வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட் டுள்ளன. கடந்த 6 மாதங்களில் மாநகர பகுதிகளில் 54 சதவிகிதமும், ஊரக பகுதிகளில் 46 சதவிகிதமும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைக்கப்பட் டுள்ளன. குறிப்பாக, சாலை சந்திப்புகள், வளைவுகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் அதிக வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலைகளில் எதிர்திசையில் வாகனங்கள் ஓட்டுவதாலும், உரிய சைகை இல்லாமல் வலது, இடது திசையில் திடீரென வாகனங்களை திருப்புவதாலும், வாகனங்களை எந்த சைகை யும் இல்லாமல் சாலையோரங்களில் நிறுத்துவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை பாதுகாப்பு குறித்து தொடர் நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும், என்றார். முன்னதாக, இகூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சிவகுமார், உதவி ஆட்டிசியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாநகர காவல் துணை ஆணையர்கள் மாடசாமி, லாவண்யா, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிபிஎம் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, மார்ச் 30- திரிபுரா மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் மீது பாஜக குண்டர்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து, ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, ஆர்.செந்தில்குமார் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, நகர செயலாளர் பி.சுந்தரராஜன், நகர கமிட்டி உறுப்பினர் பி.கனக ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில், என்.செந்தில்குமார் நன்றி கூறினார்.
பழுதாகி நின்ற லாரியில் இருந்த மக்காச்சோளத்தை தின்ற காட்டு யானை
ஈரோடு, மார்ச் 30- பழுதாகி நின்ற லாரியில் இருந்த மக்காச்சோளத்தை காட்டு யானை தின்று கொண்டிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஏராள மான யானைகள் காணப்படுகின்றன. ஆசனூர் வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ் சாலை செல்கிறது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு - கர்நாடக எல்லை யில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடியை யானைகள் அடிக்கடி கடந்து செல்கின்றன. மேலும், அந்த வழியாக செல்லும் லாரிகளில் இருந்து சாலையில் வீசப்படும் கரும்புகளை கடந்த சில மாதங் களாக தின்று பழகிய யானைகள் அடிக்கடி தேசிய நெடுஞ் சாலை பகுதிக்கு வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் வரும் கரும்பு லாரி களை வழிமறித்து அதில் உள்ள கரும்புகளை பிடுங்கி தின்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று இரவு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பூர் மாவட்டம், பல்லடத் துக்கு மக்காச்சோளம் பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டி ருந்தது. காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்ற போது லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனால் மெக்கா னிக்கை அழைத்து வர லாரி ஓட்டுநர், அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தில் ஏறி சத்தியமங்கலத்துக்கு சென்றுவிட்டார். இதனால் இரவு முழுவதும் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகிலேயே லாரி நின்று கொண்டிருந்தது. இதனிடையே, புதனன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை பழுதாகி நின்ற மக்காச் சோள லாரியின் அருகே சென்றது. இதையடுத்து லாரியில் போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாயை துதிக்கையால் கிழித்து எறிந்ததுடன், அதில் இருந்த மக்காச்சோள மூட்டைகளை துதிக்கையால் வெளியே தூக்கியது. பின்னர் அதில் இருந்த மக்காச்சோளத்தை தின்ன தொடங்கியது. இதனால், அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 1 மணி நேரம் சாலையில் நின்றபடி மக்காச்சோளத்தை சுவைத்த யானை, பிறகு தானாக வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல தொடங்கின. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை பெண் பைனான்சியர் படுகொலை
அன்னூர், மார்ச் 30- அன்னூரில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பெண் பைனான்ஸியர் வீட்டினுள் புகுந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் கரைப் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணி இவரது மனைவி தங்கமணி (54). இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தங்கமணி வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கமணி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. தங்கமணியின் கழுத்து அறுக்கபட்டும், குத்துபட்டும் கொடூரமாக இக்கொலை சம் பவம் அரங்கேறிய நிலையில் அது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது. இதில் விசா ரனை தொடங்கிய 12 மணி நேரத்தில் அன்னூர் போலீசார் கொலையாளிகளை பிடித்தனர். இதில், கொலையுண்ட தங்கமணி அவர் களின் உறவினர் கன்னியப்பன், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் தங்கமணியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து நடத்தபட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது தங்கமணிக்கு கன்னியப்பன் உறவு முறை என்பதும், இவர்கள் இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்ததா கவும் கூறப்படுகிறது. கன்னியப்பன் தங்க மணியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் 5லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கியதா கவும் அதற்கு முறையாக வட்டி கட்டாமல் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், கன்னியப்பன் வசிக்கும் எல்லப்பாளையம் பகுதிக்கு வீட்டிற்கு சென்று அடிக்கடி கொடுத்த பணம் கேட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கோபம டைந்த கன்னியப்பன் தங்கமனியை கொலை செய்த திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, தாளத்துரை பகுதியில் உள்ள தனது நண்பன் சுதாகர் என்பவருடன் கன்னி யப்பன் தங்கமணி வீட்டிற்கு சென்றுள்ளனர் சமயம் பார்த்து காத்திருந்த இருவரும் தங்க மணியின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தியும், அறுத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, இருவரும் அன்னூர் சொக்கம்பாளையம் பகுதியில் உள்ள குளக் கரைக்கு சென்று கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் இருவரும் அணிந்திருந்த ஆடை களை தீயிட்டு கொளுத்தி விட்டு அங்கிருந்து இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்று போலீ சாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த அன்னூர் தனிப்படை போலீசார் இருவரையும் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத் தனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்ச னையில் உறவுக்கார பெண்ணையே கொடூர மாக கொலை செய்த சம்பவம் அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை வசதியே இல்லை! அவதியுறும் அவிநாசி பொதுமக்கள்
திருப்பூர், மார்ச் 30- அவிநாசி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள செம்பியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சூர்யா அவென்யூ பகுதியில் 50க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்டோர் இக்குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப் பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி, காய்ச்சல் உள் ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. மேலும், மழைக்காலங்களில் சாலையில் நடக்கக்கூட முடியாத நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் எங்களிடம் முறையாக வரி வசூல் செய்தும், எங்கள் பகுதியில் எந்த வசதியும் செய்து தரப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். செம்பியநல்லூர் ஊராட்சி மன்ற அலுவல கத்தில் தொடர்ந்து மூன்று முறை மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலங்கோலமான ஆறு வழிச்சாலை செப்பனிட நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்
அலங்கோலமான ஆறு வழிச்சாலை செப்பனிட நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல் திருப்பூர் மார்ச் 30 - கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி முதல் செங்கப்பள்ளி வரை செல்லக்கூடிய ஆறு வழிச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதை உடனடியாக செப்பனிட வேண்டும் என்று தி கன்ஸ்யூர்ஸ் கேர் அசோசியேசன் கூறியுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் எஸ்.காதர் பாட்ஷா இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப் பதாவது: திருப்பூர் மாவட்டத்தின் ஊடே செல்லும் தேசிய நெடுஞ் சாலை எண்.544இல் வாகனங்கள் தடையில்லாமல் பயணிக்க 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் நுழை வுக் கட்டணம் அதிகமாகவுள்ளது பலருக்கு அதிருப்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சாலை பராமரிப்பு திருப்திப் படுத்தும் அளவுக்கு இல்லை. குறிப்பாக கருமத்தம்பட்டி தொடங்கி செங்கப்பள்ளி 4 வழிச்சாலை தொடக்கம் வரை நடு வில் செல்லும் தார்ச்சாலை நெடுகிலும், ஆங்காங்கே சிதில மடைந்து எதிர்பாராத குழிகள் தொடரும் அவலம் உள்ளது. இதனால் வேகமாக வரும் 4 சக்கர வாகனங்கள் திணறுகின் றன. அவற்றுக்கு பின்வரும் வாகனங்கள் சமாளிக்க முடியா மல் தடுமாறுவதால் வாகன விபத்துகள் உருவாக வாய்ப்பு கள் அதிகமாகவுள்ளன. கோயமுத்தூர் சாலை நிர்வாக திட்ட இயக்குநர் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. கோடைக் காலத்தில் சாலை வெப்பத் தாக்கத்தால் இம்மாதிரி யான குண்டும், குழிகள் காரணமாக காற்றடைக்கப்பட்ட சக்க ரங்கள் அதிர்வைத் தாங்க முடியாமல் வெடிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி சாலைப் பேராபத்து ஏற்பட சாத்தியங்கள் உண்டாகும். இதற்கு மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைப்பு செய்து தர தி கன்ஸ்யூர்ஸ் கேர் அசோசியேசன் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் எஸ்.காதர்பாட்சா கோரிக்கை வைத்துள் ளார்.
ஊத்துக்குளி ஆர்.எஸ். சாலையில் ஓடும் கழிவுநீர் நிரந்தரத் தீர்வு காண வாலிபர் சங்கம் கோரிக்கை
திருப்பூர், மார்ச் 30 - திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், கவுண்டம்பாளையம் ஊராட்சி, ஊத்துக்குளி பேரூராட்சி எல்லை சந்திக்கும் இடத்தில், ஊத்துக்குளி ரயிலடி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த இடத்துக்கு அருகில் சாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக் கும் பாதிப்பையும், சுகாதார கேட்டையும் ஏற்படுத்தி வருகி றது. இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை அடைப்பை நீக்கி, முறையாக கழிவுநீர் கால்வாயில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் ஊத்துக்குளி தாலுக்கா செயலாளர் கு.பாலமுரளி கோரி யுள்ளார். இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு கு.பாலமு ரளி புதனன்று அனுப்பியுள்ள கடிதத்தில், இப்பிரச்சனைக்கு கவுண்டம்பாளையம் ஊராட்சி பகுதியில் சாக்கடையை முறையாக பராமரிக்காததும், இப்பகுதில் உள்ள கடைக் காரர்கள் சாக்கடை மீது ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஊற்றி சாக்க டையை அடைத்ததும், நெடுஞ்சாலைத் துறை ஆக்கிரமிப்பும் காரணமாகும். இது சம்பந்தமாக கவுண்டம்பாளையம் ஊராட்சி, ஊத்துக்குளி பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூட்டாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணாவிட் டால் மக்களை திரட்டி போராட்டம் மேற்கொள்ளப்படும் என் றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூரில் இன்று பட்ஜெட் கூட்டம்
திருப்பூர், மார்ச் 30 – திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் வெள்ளியன்று (இன்று) மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் 2023 – 24 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையும், 2022 – 23 ஆம் ஆண்டின் திருத்திய வரவு செலவு அறிக்கையும் மாமன்றத் தின் ஒப்புதலுக்கு வைக்கப்படும் என்று மேயர் ந.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 28ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம் மற்றும் நிதிக்குழுத் தலைவர் கு.கோமதி, நிதிக்குழு உறுப்பினர்களுடன், பட்ஜெட் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
யானை விரட்டி மூவர் காயம்
திருப்பூர், மார்ச் 30 – உடுமலை திருமூர்த்தி மலை அருகே ஈசல்திட்டு மலை பகுதி செட்டில்மெண்டில் இருந்து மூன்று பேர், இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு திரும்பியபோது, இத்திபாழி என்ற இடத்தில் பாதையின் ஓரத்தில் நின்றிருந்த யானை துரத்தியது. இருசக்கர வாகனத்தை தள்ளி விட்டு, ஓடிய மூவர் கீழே விழுந்து காயமடைந்தனர். வியாழனன்று பிற்பகல் இச்சம்பவம் நடைபெற்றது. யானை துரத்தி ஓடியதில் கீழே விழுந்து காயம் அடைந்தோர், ஜல்லிபட்டி அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு ஈசல்திட்டு அடிவாரம் சென்றடைந்தனர்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:51.73/60அடி நீர்வரத்து:757கன அடி
வெளியேற்றம்:1099கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:52.50/90அடி.நீர்வரத்து:78கனஅடி
வெளியேற்றம்:96கன அடி
கேத்தனூரில் பட்ஜெட் எதிர்ப்பு சிபிஎம் பிரச்சாரம்: பொறுக்க முடியாத பாஜக குண்டர்கள் ரகளை
திருப்பூர், மார்ச் 30 - மத்தியில் ஆளும் மோடி அர சின் மக்கள் விரோத பட்ஜெட் டைக் கண்டித்து கேத்தனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் தெருமுனைப் பிரச்சார இயக் கம் நடத்தினர். இதில் பாஜக அர சின் மக்கள் விரோத நடவடிக்கை களை பட்டியலிட்டதைப் பொறுக்க முடியாத பாஜக குண் டர்கள், பிரச்சாரத்தை சீர்குலைக் கும் நோக்கத்தில் அங்குவந்து கூக்குரல் எழுப்பி ரகளையில் ஈடு பட்டனர். எனினும் அதையும் மீறி பிரச்சார இயக்கம் வெற்றி கர மாக நடத்தப்பட்டது. மத்தியில் ஆளும் பாஜக அர சின் பட்ஜெட் சாமானிய மக்க ளுக்கு சுமை ஏற்படுத்துவதாகவும், கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைப்பதாகவும், பெரும் கார்ப்பேரட் நிறுவனங்க ளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதாகும் உள்ளது. இந்த பட்ஜெட்டை அம்பலப்படுத்தி மக் கள் சந்திப்பு தெருமுனை பிரச் சார இயக்கம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்தது. இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த திங்கள், செவ்வாய் இரு தினங்கள் நூற் றுக்கணக்கான இடங்களில் மக் கள் சந்திப்பு தெருமுனைப்பி ரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக பொங்க லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகு திகளில் செவ்வாயன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் பல்லடம் - உடுமலை சாலையில் கேத்தனூர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், ஒன்றிய அரசின் அலங் கோல நடவடிக்கைகளை பட்டி யலிட்டு பேசிக் கொண்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்து, பொறுக்க முடியாமல் பாஜக குண்டர்கள் சிலர் பிரச்சாரம் நடை பெற்ற இடத்துக்கு அருகே சாலையின் நடுவில் நின்று கொண்டு கூச்சலிட்டனர். அப்போது பாதுகாப்புப் பணி யில் இருந்து காவலர்கள், மார்க் சிஸ்ட் கட்சியினரிடம் வந்து, பாஜ கவினர் பிரச்சனை செய்வதால் பேச்சை நிறுத்திக் கொள்ளும்படி கூறினர். ஆனால் இதற்கு எதிர்ப் புத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சி யினர், முறையாக அனுமதி பெற் றுத்தான் இந்த இயக்கம் நடத்தப் படுகிறது. அவர்கள்தான் குழப்பம் விளைவிக்கிறார்கள். நாங்கள் அதற்காக கூட்டத்தை நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். பாஜக குண்டர் களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி யினரும் மோடி அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதைய டுத்து தொடர்ந்து ஜி.சம்பத் பிரச் சாரம் செய்து பேசிக் கொண்டிருந் தார். மக்களும் ஆர்வத்துடன் திரண்டு நின்று இந்த பிரச்சா ரத்தை கவனித்து முன்வைக்கப் பட்ட கருத்துகளை ஆமோதித் தனர். எனவே பாஜகவினர் வேறு வழியில்லாமல் ஒதுங்கிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் பாலன், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில், ரகளை செய்த பாஜகவினர் மீது புகார் கொடுத் தார். இந்த புகாரின் மீது விசாரிப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
உதகை: ரூ.30 லட்சம் செலவில் 100 கண்காணிப்பு கேமராக்கள்
உதகை, மார்ச் 30- உதகையில் ரூ.30 லட்சம் செலவில் தனியார் பங்களிப்பு உதவியுடன் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படுவதாக போலீசார் தெரிவித்தனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற் றுலா தலமாக உதகை விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். கோடை சீசனுக்கு மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வந்து செல் கின்றனர். இதில் 70 சதவிகிதம் பேர் சொந்தவாகனங்களில் வருகின்றனர். இதேபோல், உதகை சுற்றுவட்டார பகுதி மக்களும் பொருட்கள் வாங்க நகருக்குள் வந்து செல்கின்றனர். இதனால் உதகையில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி போக்கு வரத்தை சீரமைக்கும் வகையிலும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையிலும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த போலீ சாரால் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த டிசம்பர் மாதம் உதகையில் சேரிங்கிராஸ், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 90 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண் டும் உதகை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த வாரம் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு முன்னர் பொருத்தப்பட்ட அதி நவீன கேமராக்கள் மூலம் 100 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகளை துல்லிய மாக படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ய முடியும். மேலும், தானாகவே வாகன பதிவு எண்களை சேமித்து வைக் கும். இந்த பதிவுகள் அனைத்தும் 3 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் எடுத்து கொள் ளலாம். தற்போது பொருத்தப்படும் கேமராக் கள், தனியார் பங்களிப்பு நிதியுடன் மாற் றப்படுகிறது. ரூ.30 லட்சம் செலவில் மொத்த 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. அடுத்த ஒரு வாரத் தில் இந்த பணிகள் முடிக்கப்படும். இந்த கண்காணிப்பு கேமராக்களும் பயன் பாட்டுக்கு வந்தால் போக்குவரத்து நெரி சலை மேலும் கட்டுப்படுத்த முடியும்.
குடிநீரின்றி தவிக்கும் கோவை மாநகர மக்கள் மேயர் வார்டு பகுதியிலும் துவங்கிய போராட்டம்
கோவை, மார்ச் 30- கோவை மாநகர பகுதிகளில் பல் வேறு இடங்களில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். தற்போது மாநகராட்சி மேயர் வார்டு பகுதியிலும் போராட்டம் துவங் கியுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்ற காரணத் தினால் பொதுமக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஆங் காங்கே மாநகராட்சி அதிகாரிகளை கண் டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், கோவை மாந கராட்சி, 19 ஆவது வார்டுக்குட்பட்ட மணி யகாரன் பாளையம் பகுதியில், நகராட்சி மேயராக இருக்கக்கூடிய கல்பனா ஆனந்தகுமாரின் வார்டு பகுதியில், கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களி டையே சமரச பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர். ஆனால், எங்களுக்கு கடந்த 15 நாட் களாக குடிநீர் தட்டுப்பாடு இருக்கின்ற காரணத்தினால் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். இப்பகுதியில் போக் குவரத்து சரியான வகையில் இயக்குவ தில்லை என்றும் பொதுமக்கள் காவல் துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் இப் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்கி னால் மட்டுமே போராட்டத்தை கைவிடு வதாக பொதுமக்கள் கூறினர். இதைய டுத்து காவல் துறையினர் பேச்சு வார்த்தை மேற்கொண்டு, போராட்டக் காரர்களை கலைந்து செல்ல வைத்த னர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கள் கூறுகையில், பில்லூர் இரண்டா வது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற் பட்டது. இதைத்தொடர்ந்து கோவை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்க ளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி பண்ணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம், என்றனர்.
36 எருமை மாடுகள் பறிமுதல்
நாமக்கல், மார்ச் 30- ஆந்திர மாநிலத்திலி ருந்து ஒட்டன்சத்திரம் பகு திக்கு விற்பனைக்கைக்காக இளங்கோ என்பவரது லாரி யில் எருமை மாடுகளை ஏற்றி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை போலீசார் காவல் நிலையம் அருகே வாகன தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, சந்தேகத்திற்கிட மான வகையில், லாரி முழு வதுமாக மூடப்பட்டிருந்த நிலையில் காவல் துறையி னர் தடுத்து நிறுத்தி சோத னையில் ஈடுபட்டனர். இதில், சட்ட விரோதமாக ஒரே லாரி யில் 36 எருமை மாடுகளை அடைத்து வைத்து ஒட்டன் சத்திரம் பகுதிக்கு விற்பனைக் காக கொண்டு சென்றது தெரி யவந்தது. இதையடுத்து லாரி, 36 எருமை மாடுகளை போலீ சார் பறிமுதல் செய்தனர்.
மலைப்பாதையில் கடும் மேக மூட்டம்
ஈரோடு, மார்ச் 30- ஈரோடு மாவட்டம், திம் பம் மலைப்பாதையில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங் களில் கடும் வெயில் வாட்டி வருகிறது. மாலை நேரங்களி லும், இரவு நேரங்களிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலை யில் புதனன்று காலை திம்பம் மலைப்பாதையில் மேக மூட் டம் நிலவியது. இந்த மேக மூட்டம் ஆசனூரில் இருந்து திம்பம் மலைப்பாதையில் உள்ள 20 ஆவது கொண்டை ஊசி வளைவு வரை இருந் தது. எதிரே வரும் வாகனங் கள் தெரியாத அளவுக்கு கடும் மேக மூட்டம் இருந்த தால் வாகன ஓட்டிகள் மிக வும் அவதிப்பட்டனர். மேலும் வாகன ஓட்டிகள் தங்களு டைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றனர். இதனால் திம்பம் மலைப் பாதையில் வாகனங்கள் வரி சையாக ஊர்ந்து சென்றன. காலை 10 மணி அளவில் மேக மூட்டம் விலகிய பின் னர் வாகனங்கள் சிரமமின்றி சென்று வந்தன.