districts

img

உபர், ஓலா நிறுவன செயலியின் பிடியில் ஓட்டுநர்கள்

எந்த பொருளாதார மூலதனத்தை யும் முதலீடு செய்யாமல், அறிவு மூலத னத்தை மட்டும் முதலீடாக கொண்டு,  சொந்த வாகனம் வைத்திருக்கும் உரி மையாளரையே, தொழிலாளியாக மாற்றிய உபர், ஓலா நிறுவனங்கள். இதன் பிடியில் சிக்கி தவிக்கின்றனர், உபர், ஓலா நிறுவன செயலியை நம்பி  வாழ்வாதாரத்தை நகர்த்துபவர்கள். உபர், ஓலா போன்ற பெரும் நிறு வனங்களை எதிர்த்து உலகம் முழுவ தும் தொழிலாளர்களின் போராட் டங்கள் அதிகரித்து வருகிறது. அதன்  ஒரு பகுதியாக சென்னையில் பிப்ரவரி ஒன்று முதல் ஆட்டோ மற் றும் கார்களில் ஓலா, உபர் செயலி களை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். (The raid hailing market) கைப்பேசி  மற்றும் இணையதளம் மூலமாக போக்குவரத்து சேவைகளை பெறு பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகி றது. இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில்  இந்த சந்தையின் வருவாய் மதிப்பு  8.29 பில்லியன் அமெரிக்க டாலர்களாக  உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இணையம் மூலம் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் உயரும் என கணக் கிடப்பட்டுள்ளது. மறுபுறம் இந்த செய லிகளை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி  வருகிறார்கள்.

கடந்த ஆண்டுகளில் உபர் நிறுவனத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள்:  

அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, பிரே சில், மெக்சிகோ, ஆஸ்திரேலியா உள் ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழிலா ளர்கள் உரிமைகள் வழங்கப்படாதது,  மருத்துவ காப்பீடு வழங்காதது, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப் படாதது, independent contractors   என்று வகைப்படுத்தாமல் ஊழியர்கள்  என வகைப்படுத்த வேண்டும். தொழிற் சங்கங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட் டங்கள் நடைபெற்றது.  இந்தியாவில் ஓலா மற்றும் உபர் நிறுவனத்தை எதிர்த்து, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பிளாட்பார்ம் கமிஷன் அதிகமாக பெறுவதால் வரு வாய் குறைகிறது. எனவே பிளாட் பார்ம் கமிஷனை (20- 30) என  உள்ளதை 10 சதவீதமாக குறைக்க  வேண்டும். சவாரிகளை நிராகரித்தால்  அதிகப்படியான அபராதங்கள் விதிப் பது, வெளிப்படை தன்மை இல்லாமல் கணக்குகளை முடக்குவது. மருத் துவ காப்பீடு ஓய்வூதியம் பணி பாது காப்பு உள்ளிட்டவைகள் இல்லா தது. மேலும் கூட்டாளர்கள் என வகைப் படுத்தாமல் ஊழியர்கள் என வகைப்படுத்த வேண்டும் எனக் கோரி  போராட்டங்கள் நடைபெற்றது.  2016 ஆம் ஆண்டு யுனைடெட் கிங் டம் நீதிமன்றத்தில் ஜேம்ஸ் பாரார்  மற்றும் யாசின் அஸ்லாம் ஆகிய  உபர் ஓட்டுநர்கள் வழக்கு தொடர்ந் திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு 2021  ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில்,  ஓட்டுநர்கள் எவ்வளவு சம்பாதிக்க முடி யும் என்பதை உபர் தான் தீர்மானிக் கிறது. ஒப்பந்த விதிமுறைகளை மாற்று வதற்கான உரிமை ஓட்டுநர்களிடம் இல்லை. ஓட்டுநர்களுக்கு கமிஷன் பற்றி பேச்சுவார்த்தை செய்ய அதிகா ரம் இல்லை. ஓட்டுநர்கள் சவாரிகளை நிராகரித்தால் தண்டனைகள் வழங்க லாம். ஸ்டார் ரேட்டிங் மூலம் சேவையை கண்காணித்து தகுதி தேவைகள் பூர்த்தியாகவில்லை என் றால் அவர்களது ஒப்பந்தத்தை உபர்  நிறுவனம் முடிக்கலாம் என நிபந் தனைகள் வகுக்கப்பட்டுள்ளதை நீதி மன்றம் கொண்டு (self employed) அல்ல பணியாளர்கள். என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதை அடுத்து யுகே வில் உள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உபர் ஓட்டுநர்கள் பணியா ளர்களாக மாற்றுவதற்கு உபர் நிறு வனம் ஒப்புக்கொண்டது. இதன் மூலம்  குறைந்தபட்ச ஊதியம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்டவைகள் இத்தொழியாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு (self employer) கிக் எக் கனாமி நிறுவனங்கள் கூறும் வாதத்தை சட்டரீதியாக முறியடித்து தொழிலாளர் உரிமைகளுக்கு முன் னுரிமை அளித்தது. Indian federation of app based  transport workers (ifat) பொதுச் செயலாளர் ஷேக் சலாவுதீன் கூறுகை யில், கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழி லாளர்களுக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும். நியாயமான கூலி  சமூக பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு,  self employed என வகைப்படுத் துவதை மாற்றி தொழிலாளர்கள் என வகைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். மேலும் இது  தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு களும் தொடரப்பட்டுள்ளது. யுகே, அமெரிக்காவின் கலிபோர்னியா உள் ளிட்ட நாடுகளில் உபர் நிறுவனம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மறுக்கிறது. ஓலா நிறுவனம் தனது பிசினஸ் மாடல் பாதிக்கப்படும் என்று வாதிடு கிறது. இந்நிறுவனங்களின் லாபம் அதி கரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் தொழிலாளர்கள் வறுமை யில் சிக்கிக் கொண்டுள்ளனர்.  மத்திய  அரசு 2020 ஆம் ஆண்டு COSS 2020  தொழிலாளர் சட்டத்தை அறிமுகப்ப டுத்தியது.  ஐந்து ஆண்டுகளாக அமல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக் கிறது. கடந்த மூன்று மாதத்திற்கு முன் னால் தான் இது தொடர்பாக ஒரு  குழுவை நியமித்து உள்ளது. அதில் நானும் இருக்கிறேன் என்றார். இது  தொடர்பாக ஓட்டுநர் ஒருவர் கூறுகை யில், உபர் ஓலா போன்ற நிறுவனங்கள்  கமிஷன் என்ற பெயரில் 25% வரை எடுத்துக் கொள்கிறார்கள்.  வண்டியின் தேய்மானம் செலவினங்களை எல் லாம் கணக்கில் கொண்டால் வருமா னம் போதுமான அளவு இல்லை.  நாள்  ஒன்றுக்கு 12 முதல் 14 மணி நேரம் வரை வாகனத்தை ஓட்ட வேண்டி யது உள்ளது.  எங்களுக்கென்று இஎஸ்ஐ, பிஎப் போன்ற தொழிலாளர்  உரிமைகள் வழங்கப்படுவதில்லை. மேலும் ஓலா, உபர் ஓட்டுநர்களுக் கும், டாக்ஸி ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்களுக்கும் இடையே  தான் பிரச்சனை என மடை மாற்றி விட்டு. தொழிலாளர்களுக்கு அடிப் படை உரிமைகளை வழங்காமல் ஓலா  உபர் போன்ற பெரும் நிறுவனங்கள் தப்பித்துக் கொள்கிறது. எனவே சட்ட திருத்தங்களை கொண்டு வந்து இத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை  பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. எங்களின் வாழ்வாதாரம் காக்கப் பட வேண்டும் என்றால் இந்த நிறுவ னங்கள் கமிஷனை குறைக்க வேண் டும்.  அரசு அதற்கு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றார். -லிவின்