districts

img

ஈரோட்டில் ஓட்டுநர் தினக் கொண்டாட்டம்

ஈரோடு, ஜுன் 1- ஈரோடு மாவட்டத்தில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம்  (சிஐடியு) சார்பில் ஓட்டுநர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் ஓட்டுநர் தினம்  கொண்டாடப்பட்டது. ஜுன் 1 ஓட்டுநர் தினமாகக் கொண்டாடப்பட்டு வரு கிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு  மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டது. லக்காபுரம் ஸ்ரீகாளியம்மன் லோடு ஆட்டோ ஸ்டேன்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் நாச்சி முத்து தலைமையில் நீர் மோர் வழங் கப்பட்டது. இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.கனகராஜ், கிளைச் செயலாளர் ஹரி, பொருளாளர் சதீஷ் மற்றும் ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர். தெப்பக்குளம் சிஐடியு மினி லோடு ஆட்டோ ஸ்டேண்டில் நடை பெற்ற கொண்டாட்டத்திற்கு கிளைத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை  வகித்தார். சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன் ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு களை வழங்கினார். கிளை நிர்வாகி கள் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதேபோல ஈரோடு மத்திய பேருந்து நிலையம் கார் ஸ்டேண்டு, சோலார் மினி லோடு ஆட்டோ ஸ்டேன்டு, மாணிக்கவாசகர் காலனி மினி லோடு ஆட்டோ ஸ்டேண்ட், சித்தோடு பகுதி மினி லோடு ஆட்டோ, வளையக்காரன்பா ளையம் ஸ்டேண்டு, சித்தார் ஸ்டேண்டு, டிஜி புதூர் ஸ்டேண்டு, மூலப்பாளையம் மற்றும் பழைய தின மலர் ஸ்டேண்டுகளில் ஓட்டுநர் தினம்  எழுச்சியாகக் கொண்டாடப்பட்டது.