districts

சரியான நேரத்திற்கு பேருந்து இயக்குக

தாராபுரம், டிச. 14- தாராபுரத்தில் இருந்து குண்டடம் செல்லும் 12 ஏ பேருந்தை சரியான நேரத் திற்கு இயக்கவேண்டும் என பள்ளி  மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். தாராபுரம் பஸ்நிலையத்திலிருந்து மாணவர்களுக்காக இயக்கப்படும் 12 ஏ  அரசு நகர பேருந்து காலை 7.45 மணிக்கு  புறப்பட்டு புறவழிச்சாலையில் நஞ்சி யம்பாளையம், ஆலாம்பாளையம், வடுகபாளையம், குள்ளம்பாளையம், தாளக்கரை வரை சென்று  நொச்சிப்பா ளையம், க.குல்லாபாளையம் வழியாக  மாணவர்களை ஏற்றிக்கொண்டு சரி யாக 9.00 மணிக்கு குண்டடம் அரசு  மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜேடர்பா ளையம் மாதிரி பள்ளிக்கு செல்லும். மாணவர்களை அந்த பகுதிகளில் இறக்கிவிட்டு பின்பு திருப்பூர் சென்று கோவில் வழி, திருப்பூர் பஸ்நிலையம் சென்று பயணிகளை இறக்கிவிடுவது வழக்கம். பிறகு மாலை நேரத்தில் அதே வழித்தடத்தில் மாணவர்களை அந்தந்த ஊர்களில் இறக்கிவிட்டு தாரா புரம் பஸ்நிலையத்திற்கு வருவது  வழக்கமாக இருந்து வந்தது. இந்நி லையில் தற்போது புறவழிச்சாலை வழி யாக செல்லாமல் தாராபுரம் நகர் கடை வீதி வழியாக சென்று பிறகு வரும் வழி யில் மாணவர்களை ஏற்றி செல்வ தால் பள்ளிக்கு மாணவர்கள் செல்வது  தாமதமாகிறது. இதனால் உரிய நேரத் திற்குள் பள்ளிக்கு செல்லமுடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்ற னர். தற்போது தேர்வு நேரம் என்பதால் தேர்வுக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளி மாணவர்களின் எதிர்கா லத்தை கருத்தில் கொண்டு 12 ஏ  பேருந்தை வழக்கமான நேரத்திற்கு இயக்கும் வகையில் போக்குவரத்து கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள் ளனர்.