districts

img

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு, ஆக.22- அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டில்  15 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநி யோகம் இல்லாததால் மார்க்சிஸ்ட் கட்சி யின் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டது. இதில் 3 ஆவது  வார்டு சேர்ந்த மக்களுக்கு கடந்த 15 நாட் களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இந்நிலையில், லாரியில் கொண்டு  வந்த தண்ணீரும் சுத்தமானதாக இல்லை.  இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத் துடன் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன் சிலர் கீதாசேகர் முறையிட்டுள்ளார்.  எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இதனையடுத்து, செவ்வா யன்று அப்பகுதி பொதுமக்கள், கவுன்சிலர்  கீதாசேகர் தலைமையில்,  காலிக்குடங்க ளோடு, அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டார். இப்போராட்டத்தில் சிபிஎம் தாலுகா  செயலளர் ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, தாலுகா  கமிட்டி உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, சிறு வியாபாரிகள் கட்சிக் கிளைச் செயலாளர் கே.ஏ.குருசாமி, தள்ளுவண்டி சங்க துணைச்  செயலாளர் எஸ்.மயிலு, பொதுத்தொழி லாளர் சங்க கமிட்டி உறுப்பினர் ஆர்.திரு நாவுக்கரசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுகா கமிட்டி உறுப்பினர் ஜி.மாரன் உள் ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலறிந்து வந்த பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர், செயல் அலு வலர், அந்தியூர் காவல் ஆய்வாளர், காவல்  உதவி ஆய்வாளர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், உடனடியாக லாரியின் மூலம் சுத்தமான குடிநீர் கொண்டு  வந்து பொதுமக்களுககு விநியோகித்தனர்.