சேலம், மார்ச் 17- இளம்பிள்ளை அருகே குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை நகராட்சி, 22 ஆவது வார்டுக்குட்பட்ட பாப்பாபட்டி காட்டுவளவு பகுதியில் சுமார் 500க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் விநியோகம் முறை யாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இளம்பிள்ளை - சின்னப்பட்டி பிரதான சாலை, பாப்பாபட்டி காட்டுவளவு பகுதியில் காலிக் குடங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகு டஞ்சாவடி போலீசார், சங்ககிரி துணை காவல் கண் காணிப்பாளர் ராஜா மற்றும் இடங்கணசாலை நகராட்சி ஆணையர் சேம் கிங்ஸ்டன் ஆகியோர் மறியலில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட னர். அப்போது, முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.