வேலூர், அக். 8- சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையி லிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்தார். வேலூர் மாவட்டத்தில் செயல்ப டுத்தப்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. மேட்டு சக்கர குப்பத்திலிருந்து குழாய் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு குடி நீர் கொண்டு வரப்பட்டு ஜோலார்பேட்டை யில் ரயிலில் குடிநீர் நிரப்பும் வசதி செய்யப் பட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி முதல் ஜோலார்பேட் டையில் ரயில் நிலை யத்திலிருந்து 50 வேகன்களைக் கொண்ட ரயில் 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் வில்லி வாக்கம் ரயில் நிலையம் சென்றது. அதனைத் தொடர்ந்து ஜூலை 25 ஆம் தேதி 2- வது ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில்கள் மூலம் சென் னைக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு சென்றனர். இந்த தண்ணீர் மத்திய சென்னை பகுதிகளில் விநியோகம் செய் யப்பட்டது. தற்போது வீராணம் ஏரி நிரம்பியுள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் பெய்த மழை காரணமாக கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வரு கின்றன. வீராணம், கிருஷ்ணா குடிநீர் சென் னைக்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால் ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் குடிநீர் கொண்டு வருவதை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்தனர். ஜோலார் பேட்டையி லிருந்து 159-வது குடிநீர் ரயில் புறப்பட்டது. கடைசி குடிநீர் ரயில் என்பதால் இதற்கு அதி காரிகள் பூசை செய்து வழியனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டையிலிருந்து சென் னைக்கு இதுவரை 39 கோடியே 75 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள் ளது. ரயிலில் ஒரு தடவை தண்ணீர் கொண்டு செல்ல ரூ.8.60 லட்சம் செலவாகியுள்ளது. அதன்படி இதுவரை ரயிலில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றதற்கு ரூ.13.67 கோடி வரை செலவாகியுள்ளது.சென்னை யில் குடிநீர் பற்றாக்குறை தீர்ந்து வருவதால் 2 குடிநீர் ரயிலும் திருப்பி அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.