districts

img

குரல்குட்டை பள்ளியில் வடிகால் கட்டுமான பணி

திருப்பூர், மே 25 -  உடுமலைப்பேட்டை ஒன்றியம் குரல் குட்டை ஊராட்சி யில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழை நீர்  வடிந்து  செல்ல நிதி ஒதுக்கி, வடிகால் கட்டுமானப் பணி தொடங்கப்பட் டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் விளைவாக இப்ப பணி தொடங்கப்பட்டுள்ளதை வரவேற்ப தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் கி.கனகராஜ் கூறியுள்ளார். உடுமலை ஒன்றியம் குரல்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளி வளாகத்தில் மழைக் காலங்களில் மழை நீரும்,  சேரும் சகதியும் நிறைந்து குழந்தைகள் பள்ளிக்கு உள்ளே யே வரமுடியாத நிலைமை இருந்தது. இது குறித்து குரல்குட் டை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மழைநீர் வடிந்து செல்ல கால்வாய் அமைத் திட வேண்டும், பள்ளி வளாகத்தில் மண் கொட்டி சமப்ப டுத்த வேண்டும், பள்ளிக் காம்பவுண்ட் புதுப்பிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம  ஊராட்சியில் பல முறை மனு கொடுத்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.  குரல்குட்டை பள்ளி மேலாண்மைக் குழுவிலும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாண்டு காலமாக தொடர்ந்து பள்ளியில் மழைநீரை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல  கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டது.  இந்நிலையில், உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு தற்போது வடிகால் சாக்கடை அமைத் திட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டத்தின் மூலம் கோரிக்கைககள் வென்றெடுக்க ஒத்துழைத்த அனை வருக்கும்,  நிதி ஒதுக்கிய உடுமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத் திற்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய செயலா ளர் கி.கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.