districts

img

டாக்டர் ராஜேந்திரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

ஈரோடு, மே 19- மறைந்த டாக்டர் ராஜேந்திரன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கோபிசெட்டிபாளையத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. டாக்டர் ராஜேந்திரன் நினைவரங்கத்தில் நடைபெற்ற டாக்டர் ராஜேந்திரனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்திற்கு கோபி இடைக்கமிட்டி உறுப்பினர் வி.சி. நந்தகுமார் தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயராகவன் பங்கேற்று மறைந்த டாக்டர் ராஜேந்திரன் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.  முன்னதாக, டாக்டர் ராஜேந்திரன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், டாக்டர் ராஜேந்திரன் அவர்களின் துணைவியார் டாக்டர் ராஜலட்சுமி, இவர்களது மகன்கள் டாக்டர் சதீஷ்குமார், ஜீவானந்த் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில், கோபி தாலுகா குழு செயலாளர் எஸ்.யுவராஜ், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா தலைவர் வி.ஆர்.மாணிக்கம், மாதர் சங்கத்தின் தாலுகா செயலாளர் மல்லிகா, மற்றும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சி.பிரகாசம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.