திருப்பூர், ஜன.29 - 19ஆவது திருப்பூர் புத்தக திருவிழாவில் சிறை வாசிகளுக்கு புத்தகம் தான மாக பெறும் நிகழ்ச்சி நடை பெற்றது. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறை சார்பில் ‘கூண்டுக்குள் வானம்’ என்ற தலைப்பில் சிறைகளில் இருப்போருக்கு புத்தகங்கள் தானமாக பெற்று வழங்கப்படுகின்றன. அதன்படி, திருப்பூர் மாவட்ட சிறை அலுவ லர்கள் மூலம் திருப்பூர் புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை இந்நிகழ்வு நடைபெற்றது. திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட நூலகர் வே. மாதேஸ்வரன், பின்னல் புக் ட்ரஸ்ட் ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் புத்தகங்களை தான மாக வழங்கினர். கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி.சண்முகசுந்தரம், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் எம்.ஊர்மிளா ஆகியோர் அவற்றை பெற்றுக் கொண்டனர். திருப்பூர் புத்தக திருவிழா அரங்கம் எண் 74இல் சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் தர விரும்புவோர் தானம் செய்யலாம். மேலும் புத்தகங்கள் தர விரும்புவோர், கோவை மத்திய சிறை (0422 2303062), திருப்பூர் மாவட்ட சிறை (0421 2230311) ஆகிய எண் களில் தொடர்பு கொள்ளலாம் என்று சிறைத் துறை அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.