திருப்பூர், ஜன. 19 - திருப்பூரில் மூன்று நாட்கள் நடைபெற்ற பொங்கல் திருவி ழாவின் ஒரு பகுதியாக கடைசி நாளில் மூன்றாயிரம் பெண்கள் பொங்கல் வைத்தனர். இதற்காக செங்கற்களை அடுக்கி வைத்து அடுப்பு ஏற்படுத்தப்பட்டது. மொத்தம் 20 ஆயிரம் செங்கற்கள் கொண்டு 3 ஆயிரம் அடுப்புகள் அமைக்கப்பட் டிருந்தன. தற்போது பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில், அடுப்புக்காக பயன்படுத்தப்பட்ட 20 ஆயிரம் செங்கற்களை யும் திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப் படும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும் என்று திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார் வியாழனன்று தெரிவித்துள்ளார்.