districts

img

விடுமுறை தினத்தில் தாகம் எடுக்கக்கூடாது

தண்ணீர் வியாபாரப்பொருளானால், தனியா ரிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும்! தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்து வருகிற நிலையில், ஈரோடு மாநகராட்சி தண்ணீர் விநியோகம் தனியா ருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடு முறை தினத்தில், அந்நிறுவனத்தை பூட்டி சென்ற தால் பொதுமக்கள் அல்லோகலப்பட்டுள்ளனர்.  ஈரோடு மாநகராட்சியில் வீட்டிற்கான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு குறிப்பிட்ட நேரத் தில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர் தேவை யும் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப திட்டங் களை அரசு நிர்வாகம் மேற்கொள்ளப்பட வேண் டும். ஆனால், பொறுப்பில் இருந்து ஆட்சியா ளர்கள் நழுவுவதே குறிக்கோளாக கொண்டு, தனி யாரிடம் அனைத்தும் ஒப்படைக்கிற பொறுப்பற்ற தண்மையே தொடர்கிறது. இதன்ஒருபகுதியாக, ஈரோடு மாநகராட் சியில், அபெக்ஸ் அசோசியேட்ஸ் என்ற தனியார்  நிறுவனத்துடன் இணைந்து சமூக நல சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் நிலையங்கள் பல்வேறு இடங்க ளில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 4 இடங்களில் இந்நிலையங்கள் செயல்பட 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு  லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு ரூபாய்க் கும், 20 லிட்டர் ஏழு ரூபாய்க்கும் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இம்மையங் களில் குடிநீர் பெற அபெக்ஸ் நிறுவனம் சார்பில் வங்கி ஏடிஎம் அட்டை அளவில் வெள்ளை நிறத் தில் வாட்டர் கார்டு கொடுத்துள்ளது. பிரிபெய்ட் முறையில் பணம் செலுத்தி இந்த சேவையை 24  மணி நேரமும் பெறலாம் என கூறப்பட்டது.  

தொடக்கத்தில் சிரமம் இருந்தாலும் வெளி யில் 30 ரூபாய் கொடுத்து கேன் வாங்குவதை விட  இது மலிவு என மக்களில் ஒருபகுதியினர் இத்திட் டத்திற்கு மாறியுள்ளனர்.  இந்நிலையில், இந்த சுத்திகரிக்கப்பட்ட தண் ணீர் விநியோக மையங்களில் இயந்திரங்கள் பழுதாகி விட்டால் எத்தனை நேரம், நாளில்  சரி செய்யப்படும் என தெரியாது. கோடை  காலம் ஆகிவிட்ட நிலையில், குடிநீர் தேவை  அதிகரிக்கும். தேவையான தண்ணீரை மக்க ளுக்கு அளிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. ஆனால் பணம் கொடுத்து குடிநீர் பெற்றுக்  கொள் என்று தண்ணீரை தனியாரிடம் சரக்காகக் கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கிறது மாநக ராட்சி நிர்வாகம். இம்மையங்களில் பல சுத்திகரிப்பு இயந்தி ரங்கள் பழுதடைந்து விட்டது. இதனால் பல மையங் கள் இயங்கவில்லை. அதுபோன்ற சமயங்களில் திறந்திருக்கும் மையங்களில் விரைவில் தண்ணீர் காலியாகிவிடும். இந்நிலையில், சூரம்பட்டியில் உள்ள மையத்தில் குடிநீர் காலியாகிவிட்டது. குடிநீரை நிரப்பி விநியோகிப்பதை உறுதி செய் யாமல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதுதெரியாமல் பல வாடிக் கையாளர்கள் தண்ணீர் கேனுடன் வந்து திரும்பிச்  சென்றனர். விபரம் தெரியாமல் நீண்ட நேரம் காத்தி ருப்பவர்களுக்கு அருகிலிருப்பவர்கள் விளக் கமளித்து திரும்பிச் சென்றனர். ஞாயிற்றுக் கிழமைகளிலும் தாகம் எடுக்கும். தண்ணீர் தேவைப் படும். மக்கள் என்ன செய்வார்கள் என்ற கவலை  அபெக்ஸ் நிர்வாகத்திற்கும் இல்லை. மக்களைப் பற்றிய அக்கறை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இருப்பதாகத் தெரியவில்லை.  -சக்திவேல்