districts

img

சமுதாயக்கூடம் அமைக்க சாதிய ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு

ஈரோடு, ஜூன் 30- சத்தியமங்கலம் அருகே பட்டிய லின மக்கள் குடியிருப்பில் சமுதா யக்கூடம் அமைக்க ஆதிக்க சக்தி கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பட்டியலின மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் வட்டம், புதுப்பீர்கடவு ஊராட் சிக்குட்பட்டது பட்டரமங்கலம் கிரா மம். இக்கிராமத்தில் பட்டியலின மக் கள் குடியிருப்பு பகுதியில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு, நீலகிரி  நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு நிதியி லிருந்து சமுதாய  நலக்கூடம் கட்டுவ தற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒப் பந்தம் விடப்பட்டு, கட்டுமானப் பணிகள்  துவங்கி நடைபெறும்  சமயத்தில், அப்பகு தியிலுள்ள ஊராட்சி  மன்றத் தலைவர்,  சாதி ஆதிக்க சக்திக ளைச் சேர்ந்த சிலருடன் இணைந்து,  எதிர்ப்பு தெரிவித்து சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத் தியுள்ளர். இதுதொடர்பான புகாரில்  காவல்துறை விசாரணை நடத்தி ஒரு வர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள னர். மேலும், இப்பகுதியில் பாது காப்பு கருதி சுழற்சி முறையில் காவல்  துறையினர் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் சம்பந்தப்பட்ட இடத்தையும்,  அப்பகுதி பட்டியலின மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தோழர் கே.ஆர்.திருத்தணி காசலம், தீண்டாமை ஒழிப்பு முன் னணி தாலுகா செயலாளர் ரங்க சாமி, சிஐடியு மாவட்டக்குழு உறுப் பினர் கே.பாண்டியன் ஆகியோர்  நேரில் சந்தித்து பேசினர். அப்போது, இப்பிரச்சனையில் தங்க ளுடன் நிற்பதாக பட்டியலின மக்களி டம் உறுதியளித்தனர்.