districts

img

மர்ம விலங்கு தாக்கி நாய்கள் பலி: பொதுமக்கள் அச்சம்

அவிநாசி, டிச.9- அவிநாசி அருகே சேவூரில் மர்ம  விலங்கு தாக்கி நாய்கள் உயிரிழந்த தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூர் அருகே கிளாகுளம் பகுதியில் சனிக்கிழமை காலை  மர்ம விலங்கு கடித்து நாய் உயிரி ழந்தது. இதனால் அச்சமடைந்த அப் பகுதி மக்கள் காவல் துறை மற் றும் வனத்துறையினருக்கு தகவல் தெரித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், வருவாய்த்துறையினர் போலீஸார் உள்ளிட்டோர் அப்பகுதியில் ஆய்வு  மேற்கொண்டனர். இதில் கால் தட யங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் உயிரிழந்த நாய் சேவூர்  கால்நடை மருத்துவமனையில் பிரே தப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில், சிறுத்தை கடித்து நாய் உயிரிழந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை. ஆனால் ஏதோ நாயை விட பெரிய  விலங்கு கடித்துள்ளது என மருத்து வர்கள் தெரிவித்தனர்.  அதேபோல சேவூர் - கோபி சாலை, ராக்கம்பாளையம் பிரிவு  அருகே உள்ள ரயின்போ காலனியில்  ஒரு நாய் முகம் சிதைந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளது. இந்த நாய் 2 நாள்க ளுக்கு முன் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த  வாரம் சேவூர் அருகே போத்தம்பா ளையம் பகுதியில் இரு சிறுத்தைகள்  நடமாடியதாகப் பொதுமக்கள் அளித்த தகவலின் படி, வனத்துறை யினர் ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும் அங்கு பதியப்பட்ட தட யங்கள் சிறுத்தையின் கால் தடயங் கள் இல்லை என வனத்துறையினர் கூறிச் சென்றனர். இந்நிலையில், ஒரு  வாரத்துக்குப் பிறகு முகம் சிதைந்த  நிலையில் அடுத்தடுத்து நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக் களிடையே பெரும் அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளது.