கோவை, செப். 18- இரும்புப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவது என்கிற ஒன்றிய அரசின் முடிவு, கோவை தொழில்முனைவோரிடம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய எஃகு மற் றும் கனரகத்தொழில் அமைச்சர் குமாரசாமிக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான (focia) எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, சிறுகுறு தொழில்கள், இரும்பு மூலப் பொருட்களை அதிக அளவில் வாங்கி, பெரிய நிறுவனங்களுக்கு, உதிரிப் பாகங்களாக செய்து கொடுக்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் முழு அடைப்பு காலகட்டத்திற்கு பின் வந்த 4 ஆண்டுகளில் இரும்புப் பொருட்களின் விலைகள் தாறுமா றாக உயர்ந்தன. 2022ஏப்ரல் மாதத்தில், கொரோனாவுக்கு முந்திய விலையைக்காட்டிலும் இருமடங்காக அதிகரித்தது. சிறுகுறுதொழில்கள் அரசு நிறு வனங்களிடம் இருந்தும், கார்ப் பரேட் நிறுவனங்களிடம் இருந்தும், கொரோனாவுக்கு முந்தைய விலை யில் எடுத்த ஆர்டர்களால், பெரிய இழப்பு ஏற்பட்டு,துயரத்தில் மூழ் கின. அதே சமயம், எல்லா எஃகு உருக்காலைகளும், கொழுத்த லாபத்தை ஈட்டியது. தற்போது இரும்புப் பொருட்க ளின் விலைகள் ஓரளவுக்கு குறைந் துள்ளன. சிறு குறு தொழில்களைப் பொறுத்த வரையில் இதை ‘நியாய மான விலை’ என்று கூறலாம். ஆனால் எஃகு ஆலைகளைப் பொறுத்தவரையில், இப்போது நிலவும் விலை ‘கட்டுப்படியாகாத விலை’ என்று சொல்ல முடியாது. இந்நிலையில், இரும்பு மூலப் பொருட்களின் விலை ஓரளவுக்கு குறைந்து உள்ளதால், வார்ப்படம் மற்றும் உதிரிப்பாகங்கள் செய்யும் தொழில்களுக்கு சில ஏற்றுமதி ஆர்டர்கள் வர ஆரம்பித்துள்ளன. ரயில்வே துறை, பொதுத்துறை மற்றும் பெரிய நிறுவனங்கள் முதல் காலாண்டின்போது டெண் டர்களை வெளியிட்டு, இரண்டா வது காலாண்டில் முழு ஆண்டுக் கும் தேவையான ஆர்டர்களை கொடுத்து விடுகின்றனர். மூலப் பொருட்களின் நடப்பு விலையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆர்டர்கள் முடிவு செய்யப்படுகின் றன. இந்நிலையில், இறக்குமதி வரியை உயர்த்தினால் இரும்புப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். சிறு குறு தொழில்கள் பெற்ற ஆர்டர்களை நிறைவேற்ற முடியாமல் நெருக்கடியில் சிக்கு வோம். தற்போது, இரும்பு விலை குறைந்துள்ளதால் டெக்ஸ்டைல் உதிரிப்பாகங்கள் செய்வோருக்கு ஆர்டர்கள் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இந் நிலையில், இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்தினால் சிறுகுறு தொழில்கள் சிரமத்திற்கு உள் ளாகி, அடிமட்ட நிலைக்கு மீண்டும் தள்ளப்படும். மத்திய அரசு ‘இரும் புப்பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தலாம்’ என்று முடிவெ டுக்கும் முன்னர், அனைத்து தரப்பி னரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். இரும்புப் பொருட்க ளின் மீதான இறக்குமதி வரி உயர்வை கைவிட வேண்டும். மேலும், இரும்பு, தாமிரம், அலுமி னியம் ஆகிய முக்கியமான மூலப் பொருட்களுக்கு “அதிகபட்ச விற் பனை விலையை” அரசு நிர்ணயிக்க வேண்டும். இந்த விலைகள் குறைந் தது ஓர் ஆண்டுக்கு நிலையாக இருந்தால், சிறுகுறு தொழில்கள் பாதுகாப்பாக செயல்படமுடியும். எங்களுடைய நீண்டகால கோரிக் கையான “விலை கண்காணிப்பு கமிட்டி” ஒன்றை தொழில்களின் உரிய பிரதிநிதித்துவத்துடன் ஏற்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை கடிதமாக எழுதியுள்ள னர். கோவை தொழில் கூட்டமைப் பான போசியா அமைப்பில் 23 தொழில் அமைப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.