கோவை, அக்.15 – ஒன்றிய அரசின் பணிகளில் இந்தி என இந்தி திணிப்பை செய்வதை கண்டித்தும், ஒரே பொது நுழைத் தேர்வு திட்டத் தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக் கானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஈரோட்டில் வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தித்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் தலைமை தாங்கி னார். மாநகர கழக செயலாளர் மு.சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் திரளனோர் பங்கேற் றனர்.