ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, ஈரோடு மாந கரின் 21 ஆவது வார்டில் வாக்கு சேகரிப்பு தொடங்கியது. இதில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ரா.ரகுராமன், மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, நகர செயலாளர் பி.சுந்தரராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலை வர்கள் பங்கேற்றனர்.