நாமக்கல், மார்ச் 30- நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொம தேக வேட்பாளரை ஆதரித்து, திமுக மாவட்ட நிர்வாகி நூதன முறையில் வாக்குசேக ரிப்பில் ஈடுபட்டார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில், உதயசூரியன் சின் னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மதேஸ்வரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறி ஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு தலைமை யில், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலை யம் பகுதியில் வாக்குசேகரிப்பு பிரச்சா ரம் நடைபெற்றது. அப்போது வழக்கறிஞர் சுரேஷ்பாபு தேநீர் கடையில் பொதுமக்க ளுக்கு தேநீர் போட்டு கொடுத்து வாக்கு சேக ரித்தார். இதன்பின் திருநங்கைகள் வாழ் வில் புதிய வசந்தத்தை ஏற்படுத்தியது டாக்டர் கலைஞர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்து கொடுத்ததும் டாக்டர் கலைஞர் தான் என்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வில் நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, கொம தேக நகர்மன்ற உறுப்பினர் அசோக் குமார், திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.