உதகை, மார்ச் 6- ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்துள் ளார். நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவில் உள்ள ஓவேலி பேரூ ராட்சியின் துணைத் தலைவர் பதவியை, மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. ஆனால், துணைத் தலைலர் தோ்தலில் விடுதலை சிறுத்தை கள் கட்சி வேட்பாளர் க.சகாதேவனை எதிர்த்து, திமுக கவுன்சிலர் வே.செல்வரத்தினம் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து நடைபெற்ற துணைத் தலைவருக்கான தேர் தலில் 13 வாக்குகள் வித்தியாசத்தில் செல்வரத்தினம் வெற்றி பெற்றார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்ட ணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வென்றவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிவித்தார். இதையடுத்து, ஓவேலி பேரூ ராட்சி துணைத் தலைலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் வே.செல்வரத்தினம் தனது பத வியை ராஜினாமா செய்தார்.