பொள்ளாச்சி, ஏப். 4- தன்னை வெற்றி பெற செய்தால் பொள்ளாச்சி - பழனி மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக் கையை கூடுதலாக்குவேன் என பொள்ளாச்சி திமுக வேட்பாளர்கள் கே.ஈஸ்வரசாமி வாக்குறுதி அளித் தார். பொள்ளாச்சியில் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈஸ் வரசாமி கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியதிற் குட்பட்ட சின்னாம்பாளையம், மாக்கி னாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, பூசாரிபட்டி, கரப்பாடி, கோமங்கலம், கோமங்கலம் புதூர், மலையாண்டிபட் டிணம், சீலக்காம்பட்டி உள்ளிட்ட பகு திகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண் டார். திமுக மகத்தான திட்டங்களை சொல்லி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் வாக்கு சேக ரித்து பேசுகையில், தன்னை வெற்றி பெற செய்தால், பொள்ளாச்சி - பழனி மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை கூடுதலாக்குவேன். ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்கள் மேம்பட நாடாளு மன்றத்தில் குரல் எழுப்புவேன். ஆனை மலை பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பில் புதிய பாலிடெக்னிக் கல்லூரியை திறக்க முயற்சிப்பேன் என்றார். இப்பிரச் சாரத்தின் போது, இந்தியா கூட்டணி யின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் பலர் கலந்து கொண்டனர்.