ஈரோடு, பிப். 3- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி. சி.சந்திரகுமார் காந்தி சிலை அருகில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிற்க்கான பிரச்சாரம் திங்க ளன்று மாலை நிறைவடைந்தது. இறுதி கட்ட பிரச்சாரத்தை திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஈரோடு அக்ரஹா ரம் பகுதியில் தொடங்கினார். அரசின் நலத்திட்டங்களையும், சாதனைகளை யும் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார். தொடர்ந்து நெரிக்கல் மேடு, வைராபாளையம், அசோகாபுரம், திருந கர் காலனி, கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். இப் பயணம் காந்தி சிலை அருகில் நிறைவ டைந்தது. மாநகர மேயர் நாகரத்தினம், சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி.வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்டு பெருந்திரளானோர் பங்கேற்றனர்.