districts

img

பாஜக - அதிமுக கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம்

கோவை, ஏப்.13- பத்து ஆண்டுகளாக நாட்டை சீர ழித்த பாஜக - அதிமுக கட்சிகளுக்கு  இந்த தேர்தலில் பாடம் புகட்டு வோம் என கோவை திமுக வேட்பா ளர் கணபதி ராஜ்குமார் பேசினார். இந்தியா கூட்டணியின் கோவை  மக்களவைத் தொகுதி திமுக வேட் பாளர் கணபதி ராஜ்குமார், சனி யன்று சிங்காநல்லூர் சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபு ரம், பாரதிநகர், சாரமேடு உள்ளிட்ட  பகுதிகளில் தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது நஞ்சுண்டாபுரத்தில் வாக்காளர்களிடம் பேசிய வேட்பா ளர் கணபதி ராஜ்குமார், இந்த தேர் தலானது கொடுப்பவர்களுக்கும், தடுப்பவர்களுக்கும் ஏற்படும் யுத் தம். ஒன்றியத்தில் உள்ள மோடி அரசு மக்களுக்கு ஏதோ செய்தது போல மாயத் தோற்றத்தை ஏற்ப டுத்துகின்றனர். ஆனால், நடந்தது என்னவென்றால் பெட்ரோல் டீசல்  விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி யால் சிறு, குறு தொழில்து றைகளுக்கு நஷ்டம் தான் ஏற்பட் டுள்ளது. மோடி அரசின் மோசடி யான ஆட்சியால் கோவை மாநக ரமே தள்ளாடிக் கொண்டிருக்கின் றது.  அதேபோல், அதிமுகவை பொறுத்தவரை அவர்களுக்கு பிர தமர் வேட்பாளர் கிடையாது.  எதற் காக தேர்தலில் நிற்கிறார்கள் என் பது கூட தெரியாது. அதிமுக - பாஜக வின் கள்ள உறவை புரிந்துகொள் ளுங்கள், 10 ஆண்டுகளாக நாட்டை  சீரழித்த இரண்டு கட்சிகளுக்கும் இந்த தேர்தலில் பாடம் புகட்டு வோம். உதயசூரியனை வெற்றி பெற செய்வோம் என கூறினார். இந்த பிரச்சாரத்தின்போது மாநகர மேயர் கல்பனா ஆனந்தகு மார், பகுதி கழகச் செயலாளர் ஷேக்  அப்துல்லா, தொகுதி பொறுப்பா ளர் மணிசுந்தர், வட்டக்கழக செய லாளர்கள் அமானுல்லா, மியான்கு மார், மாமன்ற உறுப்பினர் ரேவதி,  கரும்புக்கடை சாதிக் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வா கிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.