districts

img

அதிமுக வசமான வெள்ளலூர் பேரூராட்சி திமுக, அதிமுகவினர் மோதலால் பரபரப்பு

கோவை, மார்ச் 26- வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப் பட்டனர். முன்னதாக, திமுக, அதிமுகவினர் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி யது. கோவை மாவட்டம், வெள்ளலூர் பேரூராட்சியில் 15 வார் டுகள் உள்ளன. இவற்றில் 8  வார்டுகளில் அதிமுகவும், ஏழு வார்டுகளை திமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற தேர்த லில் திமுக, அதிமுகவினர்  இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலை யில், சனியன்று இரண்டாவது முறையாக பேரூராட்சி தலை வர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்  நடைபெற்றது. காலை முதலே  தேர்தல் நடைபெறும் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகம் பரபரப்புடன் காணப் பட்டது. இந்நிலையில் திமுக மற்றும் அதிமுகவினர் திடீரென கற்களை வீசி மோதிக் கொண்டதில் அதிமுகவைச் சேர்ந்த  மருதாசலம் என்பவரின் வாகனம் சேதம் அடைந்தது. இதன்பின் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தீய ணைப்பு வாகனங்கள், வஜ்ரா வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ்  வாகனங்கள் கொண்டு வரப்பட்டு இருந்தது.  இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வித மாக செயல்பட்டதால் திமுக கவுன்சிலர்கள் தேர்தல் நடை பெறும் வளாகத்தில் இருந்து  வெளியேற்றப்பட்டனர். திமுக கவுன்சிலர்கள் வாக்குசீட்டுகளை கிழித்து கையில் தூக்கிக் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் கள் 8 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்த நிலையில் தேர்தல் நடத்தப்பட்டது.  வெள்ளலூர் பேரூ ராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த மருதாசலமும், துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த கணேசனும் தேர்வு  செய்யப்பட்டனர். மாலை 4 மணி அளவில் இவர்கள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். வெற்றி பெற்ற தற்கான சான்றிதழை அதிகாரிகள் வழங்கியதாக தெரி வித்தனர்.  கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சியை திமுகவும், ஒரு பேரூராட்சியை சுயேட் சைகளும் கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது ஒரே ஒரு பேரூராட்சியை அதிமுக கைப்பற்றி இருப்பது குறிப் பிடத்தக்கது.