திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியார் நகரில், மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலை மையில் 3 ஆயிரத்து 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை மின்துறை அமைச்சர் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், ஏராள மானோர் கலந்து கொண்டனர்.