சேலம், நவ.9- மாவட்ட அளவிலான சிலம் பாட்ட போட்டிகள் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் எண்ணற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கள் மகாத்மா காந்தி விளை யாட்டு மைதானத்தில் நடை பெற்றது. இப்போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் முருகன் துவக்கி வைத் தார். 2021 - 22 ஆம் ஆண்டிற் கான பாரதியார் மற்றும் குடிய ரசு தின விளையாட்டுப் போட்டி களின் ஒரு பகுதியாக சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. 14, 19, 17 வயது ஆகிய பிரிவின் கீழ் மாணவ, மாணவிகள் சிலம் பாட்ட போட்டியில் பங்கேற்றனர். இதில் 650க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்களின் திறமைகளை வெளிப் படுத்தினர். மாவட்ட உடற்கல்வி ஆய்வா ளர் நிர்மலா தேவி மேற்பார்வை யில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், உதயகுமார் (மெட்ரிக் பள்ளிகள்) ஆகியோர் பங்கேற்றனர்.