districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தாராபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தாராபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு திருப்பூர், பிப்.21- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பல் வேறு பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்  கீழ் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் புதனன்று ஆய்வு மேற் கொண்டார்.  அரசின் அனைத்து நலத்திட்டங்கள் சேவைகள் தங்கு தடையின்றி மக்களுக்கு விரைந்து சென்றடைவதை உறுதி செய்திடும், உன்னத நோக்கத்துடன் உங்களை தேடி உங்கள்  ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்தார். அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள்  கடந்த மாதம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிக ளில் ஆய்வு மேற்கொண்ட்னர்.  அதன் தொடர்ச்சியாக, புத னன்று தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அரசுதுறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற் றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கள ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப. ஜெய்பீம், தராபுரம் நகர் மன்றத்தலைவர் பாப்புக்கண்ணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், திட்ட  இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, முதன்மைக்கல்வி அலுவலர் ந.கீதா, தனி துணை ஆட்சியர் (சமூகப் பாதுகப்புத் துறை) செல்வி, இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப் பன், இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) சொ. சீனிவாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) நகராஜன், தாரா புரம் நகராட்சி ஆணையர் திருமால் செல்வம், தாராபுரம் வட் டாட்சியர் கோவிந்தசாமி மற்றும் அனைத்துத்துறை மாவட்ட  அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இன்று கருவலூரில் மறு ஏலம்

இன்று கருவலூரில் மறு ஏலம் அவிநாசி,பிப்.21- அவிநாசி ஒன்றியம் கரு வலூர் ஊராட்சியில், ஆண்டு  தோறும் தேர் கடை மற்றும் சந்தை கடை ஏலம் நடைபெ றுவது வழக்கம். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16  ஆம் தேதி   ஏலம் நடைபெற் றது. இந்த ஏலத்தில் அப்பகு தியைச் சேர்ந்த நபர்கள் தேர் கடை மற்றும் சந்தை கடையை எடுத்துள்ளனர். இதைதொடர்ந்து மறு ஏலத் திற்காக வங்கியில் கூடுதல்  கட்டணம் செலுத்தியுள்ள னர். இந்த மறு ஏலமானது  பிப்.22 ஆம் தேதி வியாழக்கி ழமை நடைபெறுவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில்  அறிவிப்பு வெளியிட்டப்பட் டுள்ளது.

முறையான குடிநீர் விநியோகம் கேட்டு மறியல்

முறையான குடிநீர் விநியோகம் கேட்டு மறியல் ஈரோடு, பிப்.21- சென்னிமலை அருகே உள்ள பாலதொழுவு ஊராட்சி மக்கள் முறையான குடிநீர் விநியோகம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே பாலதொழுவு  ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, நஞ்சுண்டாபுரம், பால தொழுவு, ஓலப்பாளையம் உள்ளிட்ட 17 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு, வசிக்கும் பொதுமக்களுக்கும், இதே  ஊராட்சிக்கு அருகில் உள்ள புதுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த பொது மக்களுக்கும், புதுப்பாளையம் ஊராட்சி ஓடை அருகே பொதுக்கிணறு வெட்டி அந்த கிணற்றில் இருந்து தனித்தனி மின் மோட்டார்கள் மூலம் குழாய்கள் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில், பாலதொழுவு ஊராட்சிக்காக பொருத் தப்பட்டிருந்த மின்மோட்டார் கிணற்றுக்குள் மேல் மட்ட மாக பொருத்தப்பட்டதால், அதன் குழாய்கள் தண்ணீரில் படா மல் இருந்ததாக தெரிகிறது. இதனால், பாலதொழுவு ஊராட்சிக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல், கடந்த 20 நாட்களாக குடிநீருக்காக அப்பகுதி மக்கள் சிரமப் பட்டு வருகின்றனர். இந்த நிலையில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாலதொழுவு ஊராட்சியை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்க ளும் சென்னிமலை – ஊத்துக்குளி சாலையில் காலி குடங்க ளுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த  வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அனைத்து காவல் நிலையங்களிலும் உடற்பயிற்சி கூடம்: ஆணையர் தகவல்

கோவை, பிப்.21- கோவை மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என காவல் ஆணையர் பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை வெரைட்டி ஹால் சாலை பகுதி யில் உள்ள காவலர் குடியிருப்பில், சுமார்  17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவலர்க ளுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு கள் மற்றும் கோவை ரத்தினபுரி காவல்  நிலையத்திற்கான 2.7 கோடி ரூபாய் மதிப்பி லான புதிய காவல் நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார். முன்னதாக ரத்தினபுரி புதிய காவல் நிலை யத்தில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு  விழாவில் பங்கேற்ற மாநகர காவல் ஆணை யர் பாலகிருஷ்ணன், காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அறைகளை நேரில் பார்வையிட்டார்.  பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்  பங்கேற்று பேசிய அவர், புதிய காவல் நிலையம் மூலமாக பொதுமக்களுக்கு சிறப் பான சேவை அளிக்கமுடியும் என உறுதி  அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சுமார் 12,500 சதுர  அடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டப்பட் டுள்ள இந்த புதிய காவல் நிலையம் ஒருங்கிணைந்த காவல் நிலையமாக அமைக் கப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு, குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு ஆகிய காவல் நிலையங்கள் இந்த கட்டிடத்தில் ஒருங்கே நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறினார். காவலர்களுக்கான அறைகள், அதிகா ரிக்களுக்கான அறைகள் மற்றும் கூட்ட அறை  என தனித்தனியே சிறப்பான முறையில்  வடிவமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி னார்.  கோவை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட ஒரு சில காவல் நிலையங்களில் தற்போது காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது. அனைத்து நிலையங்களிலும் இதே போன்று உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என்றார். ஏற்கனவே காவலர்களுக்கான யோகா பயிற்சி வாரம் இரண்டு முறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அது மேலும் விரிவு படுத்தப்படும் என்று தெரி வித்தார். இதேபோல் கோவை மாநகர பகுதிகளில் 25 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், கடந்த ஒரு  மாதத்தில் மட்டும் 2000 சிசிடிவி கேமராக் கள் புதிதாக அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப் பிட்டார்.

ஈரோடு: ரூ.29 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இலக்கு

ஈரோடு: ரூ.29 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இலக்கு ஈரோடு, பிப்.21- ஈரோடு மாவட்டத்தில் 2024 – 25ஆம் நிதி ஆண்டில் வங்கிக்  கடன் இலக்கு ரூ.29,663.27 கோடியாக இருக்கும் என நபார்டு வங்கி மதிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு ஆட்சி யர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் செவ்வாய்க்கி ழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா  பங்கேற்று நபார்டு வங்கி சார்பில் ஈரோடு மாவட்டத்துக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக் கையை வெளியிட்டார். இந்த வளம் சார்ந்த திட்ட அறிக்கையின்படி ஈரோடு மாவட்டத்துக்கான வங்கி கடன்  இலக்கு ரூ.29,663.27 கோடியாக நபார்டு வங்கி மதிப்பிட் டுள்ளது.  இது கடந்த 2023-24-ஆம் ஆண்டு இலக்கை விட 28.30  சதவீதம் அதிகமாகும். மேலும், வரும் 2024 - 25 ஆம் நிதி யாண்டில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணைத்தொழில்களுக்கு ரூ.13,729.99 கோடியும், சிறு,  குறு தொழில்களுக்கு ரூ. 12,808.96 கோடியும், ஏற்றும திக்கு ரூ. 393.75 கோடியும், கல்விக் கடன் ரூ.466.92 கோடி யும், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.1,091.25 கோடியும், மீள் சக்தி திட்டத்துக்கு ரூ. 94.67 கோடியும் கடன் வழங்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில் வேளாண் துறை, சிறு மற்றும் குறு நிறுவனங்கள், கல்வி மற்றும் வீடுகளுக்கான கடன்களை தாமதமின்றி விரைவாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என ஆட்சியர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் குமார், இந்திய ரிசர்வ் வங்கி உதவிப் பொதுமேலாளர் அமிர்தவள்ளி, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலா ளர் அசோக்குமார் மற்றும் அனைத்து வங்கிகளின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம்
காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் சேலம், பிப்.21- சேலம் மாவட்டத்தின் பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தல மான ஏற்காட்டிற்கு நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தாவரவி யல் பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ஏரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இங்குள்ள மலைப்பகுதியில் வானுயுர்ந்த மரங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டங்களில் காபி, ஆரஞ்சு, மிளகு, அத்தி  பழம், ஆட்டுக்கால் கிழங்கு, மலை வாழை உள்ளிட்டவை அதிகளவில் விளைகிறது. குறிப்பாக ஏற்காடு தட்டவெப்ப  சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ளதால் இங்கு காட்டெருமை கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. இந்த காட்டெரு மைகள் சில சமயங்களில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக் குள் புகுந்து காட்டெருமை 2 பேரை தாக்கியது. இந்நிலை யில், தற்போது இரவு நேரங்களில் அதிக பனிப்பொழிவும் பகல் நேரங்களில் அதிக வெயிலும் காணப்படுகிறது. மேலும், கோடைகாலத்திற்கு முன்பாகவே ஏற்காடு சுற்றுவட்டாரப் பகு திகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. மேலும், ஏற்காடு  நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் குடிருப்பு பகுதிகளில் படையெடுக்க தொடங்கியுள்ளன. காபி  தோட்டங்களில் காபி செடிகளுக்கு இடையே காட்டெருமை கள் புகுந்து செடிகளை சேதப்படுத்தியும், விவசாயிகளை அச்சுறுத்தியும் வருகிறது.

பெட்ரோல் குண்டு வீசிய 6 பேர் கைது
பெட்ரோல் குண்டு வீசிய 6 பேர் கைது சேலம், பிப்.21- சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள நாரணம்பாளை யம் ஊராட்சி, அன்னை ஜெயராக்கினி நகரை அடுத்த மாதா கோவில் தெருவில், செவ்வாயன்று இரவு மூன்று இளைஞர் கள் பதிவெண் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்துள்ளனர். அப்பொழுது அதேபகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவர், இளைஞர்களை தடுத்து நிறுத்தி, “இது குழந்தைகள் அதிகமாக நடமாடும் இடம்.  எனவே, கொஞ்சம் மெதுவாக செல்லுங்கள்” என கூறியுள் ளார். அதற்கு அந்த இளைஞர்கள் அவரை தகாத வார்த்தைக ளால் திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதன்பின் சிறிது நேரம் கழித்து இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த  ஆறு பேர் கொண்ட கும்பல், பெரியநாயகம் வீடு மற்றும்  சாலைகளில் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இச்சம்பவம் குறித்து பெரியநாயகம் கொடுத்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் 2 பேர் உட்பட நந்த குமார், சாரதி, கோபாலகிருஷ்ணன், சந்தோஷ்குமார் உள் ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

கொளுத்தும் வெயில்: தர்பூசணி விற்பனை தீவிரம்

நாமக்கல், பிப்.21- கோடை காலம் தொடங்க உள்ள நிலை யில், தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் விற்பனை தீவிரமடைந் துள்ளது. கோடை காலம் என்றாலே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் அளவிற்கு வருடந்தோறும் வெயிலின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. தொட ரும் பூமியின் தட்பவெப்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிப்ரவரி மாத துவக்கத்தில் இருந்தே வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலிலிருந்து தப்பிப்ப தற்காக பொதுமக்கள் இப்போதே குடையை  பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்நிலை யில், வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வ தற்காக, உடல் சூட்டை குறைப்பதற்காக பொதுமக்கள் தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் உள்ளிட்ட நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உண்பதற்கு ஆர்வம் காட்டி  வருகின்றனர். இதனால் பள்ளிபாளையத் திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தர்பூ சணி விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளி பாளையம் – திருச்செங்கோடு சாலையில் சாலையோரம் கடை வியாபாரிகளிடம் கேட்ட பொழுது, தற்போது கோடை காலம் நெருங் கியுள்ளதால் தர்பூசணி பழங்களை பொது மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். ஒரு  கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்கி றோம். அதுவே சிறு துண்டுகளாக பத்து  ரூபாய் முதல் 20 ரூபாய் வரை பழங்களின் அளவை பொறுத்து விற்பனை செய்து வருகி றோம். நுகர்வு கலாச்சாரத்தில் கலர் கலரான  செயற்கை நிறமூட்டி குளிர்பானங்களை  கோடிக்கணக்கில் பணம் கொட்டி விளம்பரப் படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தாலும், அதையெல்லாம் தவிர்த்து உடலுக்கும், இயற்கைக்கும் எவ்வித ஆபத் தும் விளைவிக்காத இயற்கையான உணவு பொருட்களுக்கு எப்போதும் மக்கள் மத்தி யில் வரவேற்பு இருந்து கொண்டே தான் உள்ளது, என்றனர்.

தமிழக - கர்நாடகா போலீசார் ஆலோசனை

சேலம், பிப்.21- சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்ட எல் லைகளிலும், கர்நாடக மாநிலம், மாதேஸ் வரன்மலை காவல் எல்லையிலும் தருமபுரி மக்களவைத் தொகுதி அமைந்துள்ளது. இத னால் சேலம், தருமபுரி, ஈரோடு மற்றும் கர்நா டக மாநிலம், கொள்ளேகால் மாவட்ட போலீ சார் கலந்துகொண்ட கூட்டு ஆலோசனை கூட்டம் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்  கபிலன், தருமபுரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், மேட்டூர் காவல் துணை கண் காணிப்பாளர் மரியமுத்து, கொள்ளேகால் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஷ், காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  நடுகற்கள் கண்டெடுப்பு

தருமபுரி, பிப்.21- செம்மனஅள்ளி அருகே 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டம், செம்மன அள்ளி அருகே ஜக்குப்பட்டியில், தரும புரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் சி.சந்திர சேகர், பட்டனூரைச் சோ்ந்த பள்ளி ஆசி ரியர் கிருஷ்ணன், ஆராய்ச்சி மாணவர் கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப் போது நடுகற்கள் கண்டெடுக்கப்பட் டன. இதுகுறித்து வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் சந்திரசேகர் கூறு கையில், ஜக்குப்பட்டி, பெருமாள் கோவில் அருகே 10 ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த இரண்டு நடுகற்கள் உள் ளன. முதல் நடுகல்லில் உயரமாகவுள்ள ஒருவர் போா்க்களத்துக்குப் போரிட செல்வது போன்று செதுக்கப்பட்டுள் ளது. அந்த வீரா் ஒரு அரசராக இருப்ப தற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில் அரசர் அணியும் ஆபரணம் போன்ற நகை ஒன்று அந்த மனிதரின் கைகளில் உள்ளது. அவர் இடது கையில் வில்லை ஏந்தியவாறு வலது கையை பின்னோக்கி மடக்கிவைத்து காணப்படுகிறார். அதாவது ஒரு மனி தன் வேகமாக நடக்கும்போது இருக் கக்கூடிய அசைவுகள்போல அந்த உரு வம் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையின் மணிக்கட்டில் இரண்டு காப்பு கள் காணப்படுகின்றன. வலது கையில்  அம்பு பிடித்தவாறு உள்ளார். அவரது கழுத்தில் நகை இல்லை என்பதால், அப்பகுதியைச் சேர்ந்த இனக்குழுத் தலைவராக இருந்திருக்கலாம். அதே சமயம் ஒரு பழங்குடியினத்தின் கலா சாரத்தை உள்ளடக்கிய நடுகல்லாக அது காணப்படுகிறது. இரண்டாவது நடுகல் அப்பகுதி யில் போர் நடைபெற்றதைப் பிரதிபலிக் கும் வகையில் உள்ளது. அந்த நடுகற் கள் ஆநிரையை மீட்கும்போது ஏற்பட்ட  போரில் வீரர் ஒருவர் இறந்ததைப்போல தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளது. அந்த நடுகல்லில் ஒரு வீரன், கால் களை இழந்து தரையில் விழுந்து கிடப் பதுபோல காணப்படுகிறார். ஒரு கையில் வில்லும், மறுகையில் அம்புட னும் உள்ளார். அவரது விலாவில் பாய்ந்த ஓர் அம்பு உடலின் முன்பகுதி வழியாக வெளியே வந்ததுபோல வடி மைக்கப்பட்டுள்ளது. அந்த வீரரின் கால் அருகே மற்றொரு வீரா் இறந்துகிடப்பது போல ஒரு சிறிய உருவம் தென்படு கிறது. எனவே, ஆநிரை மீட்டல் காலத் தில் ஏற்பட்ட பூசலில் வீரர்கள் இறந்ததை குறிக்கும் வகையில் இந்த நடுகல் செதுக்கப்பட்டுள்ளது. அந்த வீரர் சமு தாய தலைவருடன் சேர்ந்து போரிட் டவர்களில் முக்கியமானவராக இருந்தி ருக்கலாம் என்பதால் அவருக்கும் நடு கல் எழுப்பப்பட்டுள்ளது, என்றார்.

வனவிலங்கு வேட்டை: அபராதம்

வனவிலங்கு வேட்டை: அபராதம் தருமபுரி, பிப்.21- தொப்பூர் காப்புக்காட் டில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவ ருக்கு, வனத்துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்த னர். தருமபுரி வனச்சரகம், தொப்பூர் காப்புக்காடு, பாளையம்புதூர் காவல் சுற்று எல்லைக்குட்பட்ட போன்டாகாரன் பள்ளம்  சரகத்தில் வனப்பணியாளர் கள் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2  பேர் ஒரு பை மற்றும் கத்தியு டன் காட்டில் நடமாடுவது தெரியவந்தது. இதைய டுத்து வனத்துறையினர் மேற்கண்ட நபர்களை பிடிக்க முயன்ற போது, தாதநாயக் கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கத்தி மற்றும் 15 கண்ணி வலைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து, மேற்கொண்ட விசா ரணையில் தப்பியோடிய குறிஞ்சி நகரைச் முருகன் என்பது தெரியவந்தது. இதன் பின் கைது செய்யப்பட்ட முருகனை தருமபுரி மாவட்ட  வன அலுவலர் முன்பு நேர் நிறுத்தி, ரூ.1 லட்சம் அபரா தம் விதித்தனர்.

நொரம்பு மண் கடத்தல்: லாரி பறிமுதல்

நொரம்பு மண் கடத்தல்: லாரி பறிமுதல் தருமபுரி, பிப்.21- தருமபுரி அருகே சட்ட விரோதமாக நொரம்பு மண் கடத்த பயன்படுத்தப்பட்ட டிப் பர் லாரியை போலீசார் பறி முதல் செய்தனர். தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரப்பட்ட புகாரின்பேரில், செவ்வா யன்று தருமபுரி அருகே உள்ள பள்ளக்கொல்லை யில் நகர காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது தருமபுரி, குப்பூர் கிராமத் தைச் சேர்ந்த காளி (45), என் பவர் தனது டிப்பர் லாரியில் அனுமதியின்றி நொரம்பு மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. அப்போது அவர் போலீசாரை கண்டதும் வண் டியை நிறுத்திவிட்டி தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து இந்த வாகனத்தை பறிமு தல் செய்த போலீசார், வேறு  ஓட்டுநர் உதவியுடன் நகர காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இதன்பின்  அரசு அனுமதியன்றி 3 யூனிட் நொரம்பு ஏற்றி வந்த காளி மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய மாணவர் படை அதிகாரிகள் ஆய்வு
தேசிய மாணவர் படை அதிகாரிகள் ஆய்வு நாமக்கல், பிப்.21- குமாரபாளையம் அரசுப்பள்ளியில், தேசிய மாணவர் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 71 ஆண்டுகள் மிகவும் பழமையான பள்ளியாகும். இங்கு கடந்த 8 வருடங்களாக ராணுவத்தின் என்சிசி பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத னைத்தொடர்ந்து இந்த ஆண்டு விமானப்பிரிவு புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது. சேலம் 5 ஆவது தமிழ்நாடு விமா னப்படையின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த கமாண்டிங் அதிகாரிகளின் குரூப் கேப்டன் முருகானந்தம் ஆணையின்படி, சார்ஜன்ட் தன்மாய் டாங்கர் மற்றும் கார் போரல் அஸ்லி ஜென்சிலின் ஆகிய இரண்டு அலுவ லர்கள் இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களை  பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு மற்றும் என்சிசி அலு வலர் அந்தோணிசாமி ஆகியோர் வரவேற்றனர். இப்பள்ளி யின் பயிற்சி மற்றும் விளையாட்டு மைதானம் வகுப்பறை கள் ஆவணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பார்வை யிட்டனர். பழமையான இப்பள்ளி மாணவர்களின் நலன்  கருதி உயர்கல்விக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் புதி தாக விமானப்படை என்சிசி பிரிவுகள் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்பில் சேர்வ தற்கும், ராணுவம், காவல்துறை, வனத்துறை, ரயில்வே துறை, விமானப்படை போன்றவற்றில் சேர்வதற்கு 2 முதல்  5 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்கப்படும் என்பது குறிப்பி டத்தக்கது.

விலங்கியல் மன்ற விழா
விலங்கியல் மன்ற விழா தருமபுரி, பிப்.21- தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் விலங்கி யல் துறை மன்ற விழா நடைபெற்றது. விலங்கியல் துறை தலை வர் கே.விஜயதேவன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர்  கோ.கண்ணன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தின ராக தகடூர் அதிகமான் வரலாற்றுச் சங்க செயலாளரும், தகடூர்  புத்தகப் பேரவை தலைவருமான இரா.செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவர்களுக்கு படிப்பின் அவசியம், நன்னடத்தை மற்றும் சமூக நீதி கருத்துக் களை எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து ஓவியம், கவிதை,  சிறுகதை எழுதும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். முடிவில், மாணவி  ஜீவிதா நன்றி கூறினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.