districts

img

கோவை அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கோவை, அக்.29-  கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்துறை அலுவலக அறைகளை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி செவ்வாயன்று அதிரடியாக ஆய்வு மேற் கொண்டார்.  கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கானோர் வந்து செல்லும் நிலையில், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் ஆங் காங்கே நிறுத்திவிட்டு செல்வது வாடிக் கையாக இருந்து வருகிறது. இதனால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்க ளது வாகனங்களில் உள்ளே வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதை யடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலக வளாகத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த அரசு மற்றும் தனியார் வாகனங்களை காவல்துறையினர் உதவியுடன் அகற்று மாறு மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி உத்தரவிட்டார்.  இதைத் தொடர்ந்து ஏராளமான வாகனங்களை காவலர்கள் டோவிங் வாகனங்கள் மூலம் அகற்றினர். இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்க ளது வருத்தத்தை தெரிவித்திருந்த நிலை யில், ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் புதர்மண்டிக்கிடந்த இடங்களை சுத்தம் செய்து வாகன நிறுத்தம் அமைக்க ஆட்சி யர் உத்தரவிட்டிருந்தார். இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் செவ்வாயன்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்துறை அறைகளை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக ஆய்வு மேற்கொண் டார். அப்போது, பயன்பாடின்றி இருந்த அறைகளை உடனடியாக சுத்தப்படுத்தி பிற துறைகளுக்கு ஒதுக்குமாறு உத்தர விட்ட ஆட்சியர், சுகாதாரமின்றி இருந்த பகுதிகளை ஆய்வு செய்து உடனடியாக சுத்தப்படுத்த உத்தரவிட்டார். இந்த ஆய் வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். அரிசி கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.