கோவை, நவ.5- சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் சார்பில், பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பொதுமக்க ளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை யினர், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஞாயி றன்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எவ்வாறு என விளக்கப்பட்டுள்ளது. தீபா வளி பண்டிகையின் போது பொது மக்கள் மற்றும் குழந்தை கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த விளம்பரப் பதாகைகளை சூலூர் பேருந்து நிலையம், சூலூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் பொதுமக்கள் அறியும் வண்ணம் வைத்தனர். மேலும், பள்ளி களில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட் டன. பட்டாசு வெடிப்போர் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இருக்கும் இடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என தீயணைப்பு படை அலுவலர் ரகுநாதன் கேட் டுக்கொண்டார்.