திருப்பூர், பிப்.23 - மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுவதாக தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்திருந்த மாற்றுத்திற னாளிகளிடம் கூட்டம் இல்லை என்று அலைக ழிக்கப்படுவதாக பார்வையற்றோர் குற்றம் சாட்டினர். மாற்றுத்திறனாளிகள் நல உதவி திட்டங் கள் மூலம் பார்வையற்றவர்களுக்கு ஊன்று கோல், கைக்கடிகாரம், கண் கண்ணாடி போன்றவைகள் பல மாதங்களாக வழங்கப் படாமல் உள்ளது. இந்நிலையில் வியாழ னன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் புகார் தெரிவிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் இதுகுறித்து கூறுகை யில் தெரிவித்ததாவது:
அழகு சுந்தரம், கே.செட்டிபாளையம்-
எனக்கு கண்ணு தெரியாது. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு இரண்டு வருடமாக பலமுறை மனு அளித்துள்ளேன். இது தொடர்பாக கோவில்வழி கிராம நிர்வாக அலுவலர் உங்கள் மனு குடிசை மாற்று வாரியத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது. உங் களுக்கு வீடு ஒதுக்கப்பட்டிருக்கும் என்று கூறினார். இதையடுத்து அய்யம்பாளையம் குடியிருப்பிற்கு சென்று கேட்டால் உங்க ளுக்கு இன்னும் வீடு ஒதுக்கப்படவில்லை என்று கூறி அலைகழிக்கிறார்கள். இது தொடர்பாக மாதத்தில் இரண்டு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறேன்.
தனசேகரன், மடத்து பாளையம்-
அரசாங்கத்திடம் இருந்து எதுவும் கிடைக் கமாட்டேங்குது. எனக்கு அப்பா, அம்மா இல்லை ஊதுபத்தி வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன். பார்வையற்றோருக்கான உத வித்தொகை வேண்டி மனு அளித்த நான்கு மாதம் ஆகிவிட்டது. இது குறித்து தாராபு ரம் தாலுகா அலுவலகத்தில் கேட்டால் ஒரு வருடத்திற்கு முன்பு மனு கொடுத்தவர் களுக்கு இன்னும் வரவில்லை, பொறு மையாக இருங்கள், உங்களுக்கு வரும் என்று கூறுகிறார்கள். மேலும் ரேஷன் கார்டு புதுப்பிக்க, தொடர்ந்து அலைந்து கொண்டி ருக்கிறேன்.
சண்முகம், பல்லடம்-
தாராபுரம் ரோடு புத்தெரிச்சல் மலைமே டில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அரசு ஒன்றரை சென்ட் இடம் கொடுத்து இருக்கி றது. அங்கு இதுவரை யாரும் குடியேற வில்லை. அதனால் குடிசை மாற்று வாரியத் தில் அடுக்குமாடி குடியிருப்பு வழங்க கேட் டேன். நகர் புறத்தில் வாடகைக்கு தங்கி இருப் பவர்களுக்கு மட்டுமே தரப்படும் என்று கூறு கிறார்கள். மேலும் அங்காவது வீடு கட்ட லாம் என்று புத்தெரிச்சல் பஞ்சாயத்தில் வீடு கட்ட நிதி வேண்டும் என்றால், குடிசை போட்டு ரசீது கொடுங்கள் அப்போதுதான் வீடு கட்ட நிதி ஒதுக்கப்படும் என்று கூறுகிறார்கள். பார்வை இல்லாமல் என்னால் எப்படி குடிசை போட முடியும். இது தொடர்பாக மாவட்ட ஆட் சியர் அலுவலகத்திற்கு அலைந்து வருகி றேன்.
மாரிமுத்து, திருப்பூர்-
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி பதிவு செய்து இரண்டு ஆண் டுகள் ஆகிறது. மாதத்திற்கு இரண்டு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இது தொடர்பாக கேட்க வந்து செல்கிறேன். எப் பொழுது வந்தாலும் முறையாக பதில் கூறா மல் அலைகழிக்கிறார்கள். எனக்கு கண் தெரியாது யாராவது ஒருவரை அழைத்து வர வேண்டி உள்ளது. காலை வந்தால் மாலை யாகி விடுகிறது இதனால் நம்முடன் வருபவ ரும் சிரமப்படுகிறார்கள்.
மாரிமுத்து, உடுமலை-
என் மகனுக்கு வகுப்பு சான்றிதழ் கேட்டு ஒரு வருடத்திற்கு முன்னால் மனு அளித் தேன். இன்னும் வழங்கப்படவில்லை இன்று மாற்றுத்திறனாளிகள் குறைத்திருப்பு கூட்டம் என்று அழைத்திருந்தார்கள். இங்கு வந்தால் மேல் மாடிக்கு செல்லுங்கள் கீழ் மாடிக்கு செல்லுங்கள், இன்று இல்லை என்று கூறுகி றார்கள்.
சத்தியா, ஆண்டியூர்-
வீடு கேட்டு பல வருடங்களாக மனு அளித்து வருகிறேன். என் குழந்தை பிறந்தது முதல் கொடுத்து வருகிறேன். இன்று என் பெண்ணுக்கு 5 வயது ஆகிறது. வீடு இல்லா மல் ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன். என் பெற் றோர்களுக்கும் வயதாகி விட்டது. பெண் குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன், என்றார்.