திருப்பூர், மே 21- காங்கேயம் அருகே பரஞ் சேர்வழியில் கி.பி.1038 ஆம் ஆண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு கண் டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் அமைந்துள்ள பரஞ்சேர் வழியில் உள்ள மகாதேவர்நட்டு ராமாந்தார் என்னும் மத்யபுரீஸ்வரர் கோயிலில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார் மற்றும் க.பொன்னுச்சாமி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய் வில் கி.பி.1038 ஆம் ஆண்டு வட்டெ ழுத்துக் கல்வெட்டு ஒன்று கண்டறி யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறியா ளர் சு.ரவிக்குமார் கூறுகையில், நொய் யல் ஆற்றின் தென் கரையிலும், சிவன் மலையில் இருந்து செல்லும் ஓடை யின் வட கரையிலும் அமைந்துள்ள ஊர் பரஞ்சேர்வழி. பண்டைய கொங்கு மண்டலத்தில் சைவம், வைணவம் மற் றும் சமணம் என முச்சமயங்களும் தழைந்து வளர்ந்தது இவ்வூர். இங்கு சமணப்பள்ளி இருந்ததற்கு சான்றாக தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் ஒன்று, கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது இன்றும் இங்கு அமைந்துள்ளது. இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட வட் டெழுத்துக் கல்வெட்டு சமணப்பள்ளி செயல்பட்டதை மெய்ப்பிக்கிறது. இந் தக் கல்வெட்டில் பரஞ்சேர்வழி, பழஞ் சேபளி என்று குறிப்பிடப்படுகிறது பளி என்பது பண்டு சமணர்கள் வாழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல் ஆகும்.
இந்தக் கல்வெட்டு கி.பி. 1004 முதல் 1047 வரை கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த கோனாட்டு அரசர் களில் மூன்றாவதாக வரும் விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்ததாகும். இது அம்மன்னனின் 34 ஆவது ஆட்சி யாண்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விக்கிரம சோழனின் கல்வெட்டுகள் ஏற்கனவே அன்னூர், பிரமியம், வள்ளி யெறிச்சல், அகிலாண்டபுரம், அரசன் பாளையம், மூலனூர் மற்றும் திங்களூ ரில் கிடைத்துள்ளன. இவை அனைத் தும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் என் பது ஓர் தனிச்சிறப்பாகும். வட்டெழுத்து என்பது இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்க ளுக்கு முன்பு கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த தமிழ் எழுத்து வரி வடி வம் ஆகும். இங்கு நமக்குக் கிடைத் துள்ள வட்டெழுத்துக் கல் வெட்டில் விக்கிரம சோழனுடைய தந்தை கோக லிமூர்க்கன் பெயர் வந்துள்ளது. 30 செ.மீ. அகலமும், 90 செ.மீ. உயரமும் கொண்ட இக்கல்வெட்டில் மொத்தம் 17 வரிகள் தான் கிடைத்துள்ளன. கீழ்ப் பகுதி சேதமடைந்துள்ளது. இக்கல்வெட்டை வாசித்த இந்திய வரலாற்றுப் பேரறிஞர் முனைவர் ஒய்.சுப்பராயலு “கலி மூர்க்க விக்கிரம சோழ தேவர்க்குத் திரு வெழுத்திட்டுச் செல்லானின்ற யாண்(டு) முப்பத்து நாலாவது பழஞ்சே பளியிருக்கும் முக்க(ள்ள) படரா நா “ என்று வாசித்துள்ளார். இறுதி வரிகள் கிடைக்காததால் விக்கிரமசோழனுடைய மற்ற வட்டெ ழுத்துக்கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோதில், அவை பெரும்பாலும் திருக்கோயில் அல்லது சமணப் பள் ளிக்குக்கொடை அளித்தது பற்றி வரு கின்றன. எனவே இங்கும் கி.பி. 1038 ஆம் ஆண்டு கொடை அளித்தது பற்றி யதாக இக்கல்வெட்டு இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.