உடுமலை, ஜன.29- உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்பில் 54 வகை யான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் கண்டு பிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில், ஒருங்கிணைந்த ஈர நிலங்களில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உடுமலையில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் ஞாயிறன்று கணக்கெடுப்பு பணி நடை பெற்றது. இதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட உடுமலை பகுதியில் உள்ள மருள்பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், ராய குளம், தேன் குளம், சின்ன ஆண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர் குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் டேம் ஆகிய குளங்களில் இந்த பறவைகள் கணக் கெடுப்பு நடைபெற்றது. இதில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனம் (Nature Society of Tiruppur) ரவீந்திரன் தலைமை யிலான குழுவும், ஆர்ஜிஎம் பள்ளி மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, சனியன்று தன்னார்வாளர்கள், மாணவர்களுக்கு பறவைகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி மற்றும் கணக்கெடுப்பிற்கு தேவையான தரவு புத்தகம் போன்றவை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஞாயிறன்று காலை 6.15 மணி முதல் 11 மணி வரை இந்த கணக்கெடுப்பு பயிற்சி நடை பெற்றது. இதில் நீர் நிலைகளில் உள்ள பறவைகள் மற்றும் புதர்களில் வசிக்கும் பறவைகள் போன்றவைகள் கணக்கி டப்பட்டது. உடுமலைப்பேட்டை பெரிய குளத்தில் கணேஷ் ராம், உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் சிவக்குமார், உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் க. மகேஷ் குமார், உயிரியலாளர் நரசிம்மன், வேட்டை தடுப்பு காவலர் கோபாலகிருஷ்ணன், கார்த்திகேயன், ஆர்ஜிஎம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று சுமார் 54 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கணக்கிடப்பட்டது. அதில் நத்தை குத்தி நாரை, புள்ளி மூக்கு வாத்து, சிகப்பு மூக்கு ஆள்காட்டி, பாம்பு தாரா, நீர் காக்கை சாம்பல் நாரை, செந்நீல நாரை, நீல தாலை கோழி, நாம கோழி, தாமரை கோழி, மண் கொத்தி, சிறிய நீல மீன்கொத்தி, முக்குளிப்பான், வெள்ளை அரிவாள் மூக்கன், நீல வால் கீச்சன், தவிட்டு குருவி, செம் பருந்து, செண்பகம், மஞ்சள் வாலட்டி, மைனா, பச்சை கிளி, கரிச்சான், நீல வால் பஞ்சுருட்டன், தையல் சிட்டு, ஊதா தேன்சிட்டு, கதிர் குருவி, சிட்டு குருவி, குயில், கவுதாரி, பனை உழவாரன், வால் காக்கை, சின்ன கீழ்க்கைக் சிறகி, சூரமாறி, பொறி மண் கொத்தி, பொறி வல்லூறு, குள்ளத் தாரா போன்ற பலவிதமான பறவைகள் கணக்கிடப்பட்டன.