தருமபுரி, மார்ச் 13- விபத்துகள் அதிகம் நேரிடும் காரிமங்க லம் -அகரம் பிரிவுச் சாலையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் ஆய்வு செய்தார். தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் காரிமங்கலத்திலிருந்து அக ரம் செல்லும் பிரிவுச் சாலையில் விபத்து கள் அதிக எண்ணிக்கையில் நிகழ்கின்றன. அதைத் தடுக்க அங்கு தடுப்புகள் அமைப் பது தொடர்பாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார் ஆய்வு செய்தார். இதன்பின்னர் அவர் செய் தியாளர்களிடம் கூறியதாவது, கிருஷ்ண கிரியில் இருந்து தருமபுரி வழியாக சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரி மங்கலம் - அகரம் பிரிவு சாலையில் அதிக அளவில் விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. குறைந்தது ஆண்டுக்கு 30க்கும் மேற்பட் டோர் விபத்தால் உயிரிழக்கின்றனர். ஆகவே, அதைத் தடுக்க மேம்பாலம் அமைக்கக் கோரி மத்திய தரைவழிப் போக் குவரத்து அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுவரையில் இச்சா லையில் நேரிடும் விபத்துகளைத் தடுக்க உரிய தடுப்புகள் அமைக்க வேண்டும். மேலும், சாலை வாகனங்கள் நேரடி யாக கடப்பதைத் தவிர்த்து, அணுகுச் சாலை வழியாக சென்று அருகே உள்ள மேம்பா லத்தின் கீழ் பகுதியில் உள்ள வழியாக செல்ல வேண்டும். இதுதொடர்பாக சுங்கச் சாவடி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், சாலையில் தடுப்புகள் அமைக்க சுங்கச்சாவடி நிர்வாகம் போதிய நடவ டிக்கை எடுக்கவில்லை.
அதேபோல், இந்த சாலையில் ஆண்டுதோறும் நேரிடும் விபத் துகள் குறித்து எவ்வித தரவுகளும் சுங்கச் சாவடி நிர்வாகத்திடம் இல்லை. சுங்கச்சா வடி நிர்வாகம் சுமார் 45 கி.மீ. வரையிலான சாலையைப் பராமரிக்கிறது. அதில், 6 இடங்களில் அதிக அளவிலான விபத் துகள் நிகழ்கின்றன. விபத்துகள் ஏற்படும் இடங்கள் குறித்து தரவுகள் கூட பராமரிக் காமல், சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் அலட்சியம் காட்டப்படுகிறது. வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது மட்டும் சுங்கச் சாவடி நிர்வாகத்தின் பணி யல்ல. மாறாக, சாலையைப் பராமரித்து விபத்து இல்லா சாலையாக மாற்ற நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. தருமபுரி அருகே புறவழிச்சாலையில் பிடமனேரி பிரிவு சாலையில் விபத்துகள் நிகழ்வதால், அந்தச் சாலையில் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலால், சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக விபத்துகள் நிகழும் காரிமங்கலம் -அகரம் பிரிவுச் சாலை யில் தடுப்புகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். இதேபோல், சுங்கச் சாவடியில் உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும் என மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அறிவுறுத்தி அண்மையில் உத்தரவு பிறப் பித்துள்ளார். ஆனால், தருமபுரி பாளையம் புதூர் சுங்கசாவடி நிர்வாகம் மத்திய அர சின் விதிமுறைகளை கடைபிடிக்க மறுக்கி றது. ஆகவே, இது ஒன்றிய அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரி வித்தார்.