பென்னாகரம். ஜன.1 – புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலாத் தலமான தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் சுற்றுலா பயணிகள் நூற்றுக்க ணக்கானோர் குவிந்தனர். இவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா தலமான ஒகேனக்கல் லுக்கு கர்நாடகம்,ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏரா ளமான சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். அவர்கள் அருவியல் குளித் தும் பரிசலில் சென்று மகிழ்வார்கள். இந் நிலையில், ஒகேனக்களுக்கு நீர்வரத்து ஞாயிறன்று 1200 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அருவிகளில் தண் ணீர் கொட்டியது இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு விடுமுறை காரணமாக திங்களன்று ஏரா ளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக் கலில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்தனர். பின்னர் அவர் கள் குடும்பத்தினர் நண்பர்களுடன் பாது காப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை ,தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள் மற் றும் உணவகங்களில் விற்பனை விறு விறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல் லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள் ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.